பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோ அல்பபுத்தய:। ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோ அஹிதா:॥ 16.9 ॥ |
தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொண்ட, கொடுஞ்செயல் புரிகின்ற இந்த அற்ப புத்தியினர், ( முந்திய சுலோகத்தில் கூறிய ) கருத்தை பிடித்துகொண்டு உலகின் எதிரிகளாக அதன் அழிவிற்காகவே தோன்றியுள்ளனர்.
காமமாஷ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:। மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தே அஷுசிவ்ரதா:॥ 16.10 ॥ |
நிறைவு செய்ய முடியாததான காமவசபட்டு, மதிமயங்கி, ஆடம்பரமும் தற்பெருமையும் கர்வமும் கொண்டு கெட்ட எண்ணங்களுடனும் தீய நோக்கங்களுடனும் அவர்கள் செயல்படுகிறார்கள்.
சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஷ்ரிதா:। காமோபபோகபரமா ஏதாவதிதி நிஷ்சிதா:॥ 16.11 ॥ ஆஷாபாஷஷதைர்பத்தா: காமக்ரோதபராயணா:। ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸம்சயாந்॥ 16.12 ॥ |
அளவிட முடியாததும் மரணத்தை முடிவாக கொண்டதுமான ( ஆசைகளின் வசப்பட்டு, அவை நிறைவேறாததால் ) கவலையில் ஆழ்ந்து, காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாக கருதி, எல்லாம் இவ்வளவு தான் என்று தீர்மானித்து, நூற்றுகணக்கான ஆசைகளால் கட்டுப்பட்டு, காமம் கோபம் இவற்றின் வசப்பட்டு, காமபோகத்திற்காக நியாயமற்ற வழியில் செல்வக் குவியல்களை தேட முயல்கின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, ஸ்ரீமத், பதினாறாவது, யோகம், அத்தியாயம், தைவாஸுரஸம்பத்விபாக, வசப்பட்டு, இந்து, bhagavad, gita