குறுந்தொகை - 270. முல்லை - தலைவன் கூற்று
(வினைமுற்றி மீண்டு தலைவியோடு இன்புற்ற தலைமகன் மழையைநோக்கி, "நீ நன்றாகப் பெய்வாயாக!" என வாழ்த்தியது.)
தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி ஊழிற் கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெறுவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ |
5 |
டிவளின் மேவின மாகிக் குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. |
|
- பாண்டியன் பன்னாடுதந்தான். |
யாம்! செய்வினை முற்றுவித்ததனால் நிறைவை உடைய உள்ளத்தோடு இத்தலைவியோடு விரும்பிப் பொருந்தினேமாகி சூடிய குவளையினது குறிய காம்பை உடைய அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற நல்ல மெல்லிய கூந்தலாகிய மெல்லிய பாயலின் கண்ணே இருந்தேம். ஆதலின் பெரிய மேகமே இப்பொழுது தங்கிய இருள் கெடும்படி மின்னுதலைச் செய்து குளிர்ச்சி உண்டாம்படி வீழுகின்ற துளிகளுள் இனியவற்றைத் துளித்து முறைமையினால் குறுந்தடியால் அடிக்கப் பெறும் முரசைப் போல முழங்கி பன்முறை இடித்து மழையைப் பெய்து வாழ்வாயாக!
முடிபு: யாம் மெல்லணையேம்; பெருவான், இனி மின்னிச் சிதறிஇடித்துப் பெய்து வாழி!
கருத்து: நாம் இன்பம் பெற்றேம்; மழை நன்கு பெய்வதாக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 270. முல்லை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், உடைய, தலைவன், முல்லை, கூற்று, குறுந்தொகை, பெய்து, மெல்லிய, யாம், செய்வினை, சங்க, முழங்கி, எட்டுத்தொகை