குறுந்தொகை - 271. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு உடம்பட்டுத் தூதாக வந்த தோழியை நோக்கி, "தலைவரோடு ஒரு நாள் நட்புப் பூண்டேன்; அது பல நாளும் எனக்குத் துன்பம் தருவதாயிற்று. அவ்வொரு நாள் செய்த நட்புப் பற்றியே ஏற்றுக் கொள்வேன்" என்றது.)
அருவி யன்ன பருவறை சிதறி யாறுநிறை பகரு நாடனைத் தேறி உற்றது மன்னு மொருநாள் மற்றது தவப்பன் னாள்தோள் மயங்கி வௌவும் பண்பின் நோயா கின்றே. |
5 |
- அழிசி நச்சாத்தனார். |
தோழி! அருவியை ஒத்த பரிய துளிகளைச் சிதறி ஆறு வெள்ளத்தைக் கொண்டு ஒலிக்கும் நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து அவனோடு பொருந்திய காலம் ஒரு நாளே ஆகும; அங்ஙனம் பொருந்தியது மிகப் பல நாட்கள் தோளோடு கலந்து அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையினை உடைய நோயாக ஆகின்றது.
முடிபு: நாடனை உற்றது ஒரு நாள்; அது மயங்கி நோயாகின்று.
கருத்து: அறங்கருதித் தலைவனை ஏற்றுக் கொள்கின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 271. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், நாள், மருதம், குறுந்தொகை, தலைவி, கூற்று, உற்றது, உடைய, சிதறி, மயங்கி, வந்த, எட்டுத்தொகை, சங்க, நட்புப், ஏற்றுக்