குறுந்தொகை - 268. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே இருப்ப, இரவுக் குறியின்கண் உண்டாகும் ஏதத்துக்கு அஞ்சுதலையும், தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் தோழி தலைவிக்குக் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது.)
சேறிரோ எனச் செப்பலு மாற்றாம் வருவி ரோஎன வினவலும் வினவாம் யாங்குச் செய்வாங்கொல் தோழிபாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து |
5 |
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே. | |
- கருவூர்ச் சேரமான் சாத்தனார். |
தோழி! பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை துணிக்கும் இடியொடு கூடிய பாதியிரவு என்று எண்ணாராகி ஈண்டுப் போந்து. நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை அடைந்த தலைவர் பால் செல்கின்றீரோ என்று செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்; சென்றால் மீண்டும் வருவிரோ என்று கேட்டலையும் செய்யோம; எவ்வாறு செய்வேம்!
முடிபு: தோழி, வந்து அடைந்திசினோர்பால், சேறிரோவெனச் செப்பலு மாற்றாம்; வினவாம்; யாங்குச் செய்வாம்!
கருத்து: தலைவர் வரைந்து கொள்ளுதலே நலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 268. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, யாங்குச், வந்து, தலைவர், வினவாம், வரைந்து, எட்டுத்தொகை, சங்க, செப்பலு, மாற்றாம்