குறுந்தொகை - 250. பாலை - தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்று வினைமுற்றி மீண்டு வரும் பொழுது தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, "இன்று மாலை வருவதற்குள் தலைவி இருக்கும் இடத்திற்கு விரைவில் தேரைச் செலுத்துவாயாக" என்றது.)
பரலவல் படுநீர் மாந்தித் துணையோ டிரலை நன்மா னெறிமுத லுகளும் மாலை வாரா வளவைக் காலியற் கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப் பொருகயன் முரணிய உண்கண் |
5 |
தெரிதீங் கிளவி தெருமர லுயவே. | |
- நாமலார் மகனார் இளங்கண்ணனார். |
தேர்ப்பாகனே பருக்கைக் கற்களை உடைய பள்ளத்திலே தங்கிய நீரை உண்டு ஆண்மான் பெண் மானோடு வழியினிடத்து துள்ளி விளையாடுகின்ற மாலைக் காலம் வருவதற்கு முன்னே ஆழ்ந்த நீரில் உள்ள ஒன்றை ஒன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும் ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி துன்பத்தால் சுழலுதலினின்றும்நீங்க காற்றின் இயல்பை உடைய விரைகின்ற குதிரையைச் செலுத்துவாயாக.
முடிபு: பாக, மாலை வாரா அளவை, கிளவி உய மாக்கடவுமதி.
கருத்து: மாலை வருவதற்கு முன் தலைவி இருக்கும் இடத்திற்குத்தேரைச் செலுத்துவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 250. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், மாலை, தலைவன், கூற்று, செலுத்துவாயாக, உடைய, பாலை, தலைவி, குறுந்தொகை, வருவதற்கு, கிளவி, வாரா, இருக்கும், எட்டுத்தொகை, சங்க