ஐங்குறுநூறு - 40. மறுதரவுப் பத்து
புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண் கதுப்பயல் அணியும் அளவை பைபயச் சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை கல்கெழு சிறப்பின் நம்மூர் எவ்விருந் தாகிப் புகுக நாமே. | 396 |
கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரன்அணி வாரா நின்றனள் என்பது முன்னுற விரந்தநீர் உரைமின் இன்நகை முறுவல்என் ஆயத்தோர்க்கே. | 397 |
புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி மடமான் அறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி இனிய வாகுக என்று நினைத்தொறும் கலிழும் என்னினும் மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் ஊரே. | 398 |
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே. | 399 |
மள்ளர் அன்ன மரவந் தழீஇ மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும் அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில் காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல் வெஞ்சின விரல்வேல் காலையொடு இன்றுபுகு தருமென வந்தன்று வந்தன்று தூதே. | 400 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 40. மறுதரவுப் பத்து, இலக்கியங்கள், மறுதரவுப், ஐங்குறுநூறு, பத்து, வந்தன்று, அன்ன, எட்டுத்தொகை, சங்க