ஐங்குறுநூறு - 40. மறுதரவுப் பத்து
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ வெம்சின விறல்வேல் காளையொடு அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே. | 391 |
வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற வாய்கவின் தொந்த நுதலும் நோக்கிப் பரியல் வாழி தோழி பரியின் எல்லைஇல் இடும்பை தரூஉம் நல்வரை நாடனொடு வந்த மாறே. | 392 |
துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக வந்தன ளோநின் மகளே வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே. | 393 |
மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த அன்பில் அறானும் அருளிற்று மன்ற வெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப் பெருமட மான்பிணை அலைத்த சிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே. | 394 |
முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச் சுடர்விடு நெடுங்கொடி விடர்குகை முழங்கும் இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென்மெல ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து கறங்கிசை அருவி வீழும் பிறங்கிரும் சோலைநம் மலைகெழு நாட்டே. | 395 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 40. மறுதரவுப் பத்து, இலக்கியங்கள், மறுதரவுப், ஐங்குறுநூறு, பத்து, குறுமகள், அம்சில், எட்டுத்தொகை, சங்க