ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து
மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவண னாக நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி நீல்நிற வியலகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே. | 401 |
புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே. | 402 |
புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன் முறுவலில் இன்னகை பயிற்றிச் சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே. | 403 |
வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத் தானவன் சிறுபுறம் கவையினன் நன்று நறும்பூம் தண்புற அணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. | 404 |
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல் பூப்பல அணிந்த வைப்பின் புறவணி நாடன் புதல்வன் தாயே. | 405 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து , இலக்கியங்கள், புதல்வன், செவிலி, ஐங்குறுநூறு, கூற்றுப், பத்து, கவைஇய, அணிந்த, சங்க, எட்டுத்தொகை, கிடக்கை