ஐங்குறுநூறு - 34. தலைவி இரங்கு பத்து.
அம்ம வாழி தோழி நம்வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற நின்றதில் பொருட்பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே. | 336 |
அம்ம வாழி தோழி நம் வயின் மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. | 337 |
அம்ம வாழி தோழி சாரல் இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம் மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும் பிரிவருங் காலையும் பிரிதல் அரிதுவல் லுநர்நம் காத லோரே. | 338 |
அம்ம வாழி தொழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்றுகொல் காதலவர் சென்ற நாடே. | 339 |
அம்ம வாழி தொழி காதலர் உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல் விட்டுச் சென்றனர் நம்மே தட்டைத் சென்றனர் நம்மே தட்டைத் தீயின் ஊரலர் எழவே. | 340 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 34. தலைவி இரங்கு பத்து., வாழி, அம்ம, இலக்கியங்கள், தலைவி, தோழி, பத்து, இரங்கு, ஐங்குறுநூறு, நம்மே, தட்டைத், சென்றனர், மன்ற, எட்டுத்தொகை, சங்க, தொழி