ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து.
அவரோ வாரார் தான்வந் தன்றே குயிற்பெடை இன்குரல் அகவ அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே. | 341 |
அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. | 342 |
அவரோ வாரார் தான்வந் தன்றே திணிநிலைக் கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே. | 343 |
அவரோ வாரார் தான்வந் தன்றே எழில்தகை இஅள்முலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. | 344 |
அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. | 345 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து., வாரார், தான்வந், தன்றே, பொழுதே, அவரோ, இலக்கியங்கள், இளவேனிற், பத்து, ஐங்குறுநூறு, எட்டுத்தொகை, சங்க