ஐங்குறுநூறு - 34. தலைவி இரங்கு பத்து.
அம்ம வாழி தோழி அவிழிணர்க் கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கம்ழும் வெற்பின் இன்னா என்பஅவர் சென்ற ஆறே. | 331 |
அம்ம வாழி தோழி என்னதூஉம் அறநில மன்ற தாமே விறன்மிசைக் குன்றுகெழு கானத்<ட பண்பின் மாக்கணம் கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் ஐய என்னா தவ்வே. | 332 |
அம்ம வாழி தோழி யாவதும் வல்லா கொல்லோ தாமே அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே. | 333 |
அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே. | 334 |
அம்ம வாழி தோழி நம்வயின் நெய்தோ ரன்ன வெவிய எருவை கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும் கடுநனி கடிய என்ப நீடி இவன் வருநர் சென்ற ஆறே. | 335 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 34. தலைவி இரங்கு பத்து., தோழி, வாழி, அம்ம, இலக்கியங்கள், ஐங்குறுநூறு, இரங்கு, தலைவி, பத்து, என்னா, தவ்வே, தாமே, மன்ற, எட்டுத்தொகை, சென்ற, சங்க