ஐங்குறுநூறு - 33. இடைச்சுரப் பத்து.
அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது மடமான் அமபினை மறியொடு திரங்க நீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின் இன்னா மன்ற சுரமே இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே. | 326 |
பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச் சிறுகண் யானை நிலந்தொடல் செல்வா வெயின்முளி சோலைய வேய்உயர் சுரனே அன்ன ஆர்இடை யானும் தண்மை செய்தஇத் தகையோன் பண்பே. | 327 |
நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய வாயினும் வெய்ய மன்ற மடவரல் இந்துணை ஒழியக் கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே. | 328 |
ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறுதரு வதுகொல் தானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே. | 329 |
வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக் கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும் அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. | 330 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 33. இடைச்சுரப் பத்து., இலக்கியங்கள், பத்து, இடைச்சுரப், ஐங்குறுநூறு, சோலைய, நீந்தி, பண்பே, மன்ற, சங்க, எட்டுத்தொகை, ஒழிந்தோள்