முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.061.திருச்செங்காட்டங்குடி
1.061.திருச்செங்காட்டங்குடி
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர்.
தேவியார் - திருக்குழல்மாதம்மை.
656 |
நறைகொண்ட மலர்தூவி முறைகொண்டு நின்றடியார் சிறைகொண்ட வண்டறையுஞ் கறைகொண்ட கண்டத்தான் |
1.061.1 |
அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம் கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணி செய்து வழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில் சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.
657 |
வாரேற்ற பறையொலியுஞ் ஊரேற்ற செல்வத்தோ சீரேற்ற முடைத்தாய காரேற்ற கொன்றையான் |
1.061.2 |
கார்காலத்தே மலரும் கொன்றை மலரை அணிந்த சிவபிரான், வாரால் இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும், சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும் நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச் செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான்.
658 |
வரந்தையான் சோபுரத்தான் கிரந்தையான் கோவணத்தான் சிரந்தையான் செங்காட்டங் கரந்தையான் வெண்ணீற்றான் |
1.061.3 |
கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், வரந்தை, சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச் செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
659 |
தொங்கலுங் கமழ்சாந்து டங்கையாற் றொழுதேத்த செங்கயல்பாய் வயலுடுத்த கங்கைசேர் வார்சடையான் |
1.061.4 |
மணம் கமழும் மாலைகளும் சந்தனமும், அகில் புகையும் கொண்டு தொண்டர்கள் தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள் செய்த பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவபிரான். சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
660 |
பாலினால் நறுநெய்யாற் நூலினான் மணமாலை சேலினார் வயல்புடைசூழ் காலினாற் கூற்றுதைத்தான் |
1.061.5 |
தனது இடத் திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும், பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடை சூழ்ந்துள்ள திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
661 |
நுண்ணியான் மிகப்பெரியான் தண்ணியான் வெய்யான்நந் திண்ணியான் செங்காட்டங் கண்ணியான் கண்ணுதலான் |
1.061.6 |
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியன யாவற்றினும் மிக நுண்ணியன். பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமதுமுடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.
662 |
மையினார் மலர்நெடுங்கண் மெய்யினான் பையரவ செய்யினா ரகன்கழனிச் கையினார் கூரெரியான் |
1.061.7 |
கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
663 |
தோடுடையான் குழையுடையா பீடுடையான் போர்விடையான் சேடுடையான் செங்காட்டங் காடுடையா னாடுடையான் |
1.061.8 |
திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொரு காதில் குழை அணிந்தவன். கயிலையைப் பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன். பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள்புரிபவன்.
664 |
ஆனூரா வுழிதருவா வானூரான் வையகத்தான் தேனூரான் செங்காட்டங் கானூரான் கழுமலத்தான் |
1.061.9 |
விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
665 |
செடிநுகருஞ் சமணர்களுஞ் படிநுகரா தயருழப்பார்க் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கடிநகராய் வீற்றிருந்தான் |
1.061.10 |
முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும், காவியாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.
666 |
கறையிலங்கு மலர்க்குவளை நறையிலங்கு வயற்காழித் சிறையிலங்கு புனற்படப்பைச் மறையிலங்கு தமிழ்வல்லார் |
1.061.11 |
கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து விளங்குவதும் மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர்நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய வேதப் பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.061.திருச்செங்காட்டங்குடி , சரத்தானே, செங்காட்டங், கணபதீச்சரத்தில், திருச்செங்காட்டங்குடியில், கணபதீச், எழுந்தருளியுள்ளான், அணிந்தவன், விளங்கும், மணம், கொண்டு, இறைவன், சிவபிரான், குடியதனுள், திருச்செங்காட்டங்குடி, திருமுறை, கமழும், நிறைந்த, பொருந்திய, உடைய, எழுந்தருளியுள்ள, சிவந்த, வயல்கள், தனது, மிகப்பெரியான், மனத்துளான், சூழ்ந்த, சூழப்பட்ட, கொண்டவன், நுகரும், தமிழ், உடையவன், காதில், வளமான, சேர்ந்தாடும், பாகமாகக், ஆகிய, அடியவர்கள், விதிப்படி, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், கோயில், ஒலியும், அவர்கட்கு, நீண்ட, கணபதீரச், சூடியவன், குடியான்செஞ், மீன்கள்