முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.060.திருத்தோணிபுரம்
1.060.திருத்தோணிபுரம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர்.
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
645 |
வண்டரங்கப் புனற்கமல ஒண்டரங்க விசைபாடு துண்டரங்கப் பூண்மார்பர் பண்டரங்கர்க் கென்னிலைமை |
1.060.1 |
வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின் விளைந்த தேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு கொண்டு, ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற் சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட மார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.
646 |
எறிசுறவங் கழிக்கான அறிவுறா தொழிவதுவு செறிசிறார் பதமோதுந் வெறிநிறார் மலர்க்கண்ணி |
1.060.2 |
எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங் கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீக்குதற்கரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி, பத மந்திரங்களை ஓதிப் பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும் முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக.
647 |
பண்பழனக் கோட்டகத்து கண்பகத்தின் வாரணமே செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் பண்பனுக்கென் பரிசுரைத்தாற் |
1.060.3 |
பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில் முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே! சண்பகமரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின் பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக.
648 |
காண்டகைய செங்காலொண் பூண்டகைய முலைமெலிந்து சேண்டகைய மணிமாடத் ஆண்டகையாற் கின்றேசென் |
1.060.4 |
உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையே! 'காதல் மிக்கூர்தலால் அணிகலன்களைப் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கப் பெற்று உன் அடியவள் வருந்துகிறாள் என்று வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக.
649 |
பாராரே யெனையொருகாற் காராருஞ் செழுநிறத்துப் தேராரு நெடுவீதித் நீராருஞ் சடையாருக் |
1.060.5 |
அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.
650 |
சேற்றெழுந்த மலர்க்கமலச் வீற்றிருந்த வன்னங்காள் தோற்றுவித்த திருத்தோணி கூற்றுதைத்த திருவடியே |
1.060.6 |
வளமான சேற்றிடை முளைத்து மலர்ந்த தாமரை மலர்மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரையாகவீச, அரச போகத்தில் வீற்றிருக்கும் அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணி புரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களாக.
651 |
முன்றில்வாய் மடற்பெண்ணைக் அன்றில்காள் பிரிவுறுநோ தென்றலார் புகுந்துலவுந் கொன்றைவார் சடையார்க்கென் |
1.060.7 |
வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத் துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக.
652 |
பானாறு மலர்ச்சூதப் ஏனோர்க்கு மினிதாக தேனாரும் பொழில்புடைசூழ் கோனாரை யென்னிடைக்கே |
1.060.8 |
பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக.
653 |
நற்பதங்கண் மிகவறிவாய் பொற்பமைந்த வாயலகிற் சொற்பதஞ்சேர் மறையாளர் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் |
1.060.9 |
அழகமைந்த வாயாகிய அலகினை உடைய நாகண வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால், இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில் வல்லமறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற்பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.
654 |
சிறையாரு மடக்கிளியே முறையாலே யுணத்தருவன் துறையாருங் கடற்றோணி பிறையாளன் திருநாமம் |
1.060.10 |
அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என்பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத் தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை 'ஒரு முறை என் செவி குளிரப் பேசுவாயாக.
655 |
போர்மிகுத்த வயற்றோணி கார்மிகுத்த கறைக்கண்டத் தார்மிகுத்த வரைமார்பன் சீர்மிகுந்த தமிழ்வல்லார் |
1.060.11 |
தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை, வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலை போன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினைய வல்லவர் சிவலோகம் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.060.திருத்தோணிபுரம் , உடைய, திருத்தோணி, திருத்தோணிபுரத்தில், புரத்துறையும், எழுந்தருளிய, நிறைந்த, வாழும், அழகிய, பொருந்திய, தாமரை, திருமுறை, திருத்தோணிபுரம், பசலை, ஒருமுறையேனும், சென்று, சூடிய, கருமை, கூறுவீர்களாக, என்பால், கொண்ட, மாறி, நான், உறையும், கூறீரே, தோற்றுவித்த, சிவபிரானை, புரத்தீசன், நீவிர், பொழில்புடைசூழ், வளமையான, கூடிய, கென்னிலைமை, திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், மலர்ந்த, உண்டு, கரைகளில், சிவந்த, துன்பத்தை, விளம்பாயே, பிரிவாற்றாத, மலர்க்கண்ணி, விளங்கும்