முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.118.திருப்பருப்பதம்
1.118.திருப்பருப்பதம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும் மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர்.
தேவியார் - பருப்பதமங்கையம்மை.
1271 |
சுடுமணி யுமிழ்நாகஞ் இடுமணி யெழிலானை விடமணி மிடறுடையான் படுமணி விடுசுடரார் |
1.118.1 |
மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறுடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.
1272 |
நோய்புல்கு தோறிரைய நீபுல்கு தோற்றமெல்லா வாய்புல்கு தோத்திரத்தால் பாய்புலித் தோலுடையான் |
1.118.2 |
அறியமையுள் மூழ்கித் திளைக்கும் நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில் இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும், நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும் நிலையையும் நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி, வலம் வந்து, தலையால் வணங்கிப் பாயும் புலியின் தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்; வருக.
1273 |
துனியுறு துயர்தீரத் இனியுறு பயனாத கனியுறு மரமேறிக் பனியுறு கதிர்மதியான் |
1.118.3 |
நெஞ்சே! வருத்தத்தைத் தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல் வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் ஆகிய இரண்டிலும் பற்றுக் கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெருமானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.
1274 |
கொங்கணி நறுங்கொன்றைத் எங்கணோ யகலநின்றா ஐங்கணை வரிசிலையா பைங்கண்வெள் ளேறுடையான் |
1.118.4 |
தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன், எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்பு வில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதி திருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.
1275 |
துறைபல சுனைமூழ்கித் மறையொலி வாய்மொழியால் சிறையொலி கிளிபயிலுந் பறைபடு விளங்கருவிப் |
1.118.5 |
கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும், வண்டுகளின் ஒலியும் நீங்காததாய்ப் பறை போல ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும், தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
1276 |
சீர்கெழு சிறப்போவாச் ஏர்கெழு மடநெஞ்சே கார்கெழு நறுங்கொன்றைக் பார்கெழு புகழோவாப் |
1.118.6 |
அழகிய மடநெஞ்சே! பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம் மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என இரண்டுபட எண்ணாமல் உறுதியாக ஒன்றை நினைந்து நெறியின் பயனாய் விளங்கும், கார்காலத்தே மலரும் மணம் மிக்க கொன்றை மலர்மாலை சூடியவனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.
1277 |
புடைபுல்கு படர்கமலம் தொடைபுல்கு நறுமாலை விடைபுல்கு கொடியேந்தி படைபுல்கு மழுவாளன் |
1.118.7 |
ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர் வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.
1278 |
நினைப்பெனு நெடுங்கிணற்றை மனத்தினை வலித்தொழிந்தே கனைத்தெழு திரள்கங்கை பனைத்திரள் பாயருவிப் |
1.118.8 |
நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையா வண்ணம் காத்துக்கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.
1279 |
மருவிய வல்வினைநோ திருவுரு வமர்ந்தானுந் இருவரு மறியாமை பருவரை யுறநிமிர்ந்தான் |
1.118.9 |
பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான்முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.
1280 |
சடங்கொண்ட சாத்திரத்தார் மடங்கொண்ட விரும்பியராய் குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் படங்கொண்ட போர்வையினான் |
1.118.10 |
அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.118.திருப்பருப்பதம் , பரவுதுமே, பருப்பதம், பரவுவோம், நாம், திருப்பருப்பதத்தை, எழுந்தருளிய, உடைய, ஆகிய, மணம், திருப்பருப்பதம், திருமுறை, மடநெஞ்சே, திருப்பருப்பதத்தைப், மிக்க, வந்து, விளங்கும், கமழும், கொன்றை, எழுப்பும், நறுமாலை, நீரை, சிவபிரான், மயங்கியோர், எழுந்த, நம்மை, ஒன்றை, என்னும், துன்பங்கள், புகையோடு, நிறைந்த, மணிகள், அழகிய, சிவபெருமான், தரும், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், தோன்றும், மூழ்கித், மனம்வையேல், குளிர்ந்த, துயர்தீரத், வருக, நெஞ்சே, நினைந்து, வணங்குவோம்