முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.117.திருப்பிரமபுரம் - மொழிமாற்று
1.117.திருப்பிரமபுரம் - மொழிமாற்று
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1259 |
காட தணிகலங் காரர வம்பதி தோட தணிகுவர் சுந்தரக் காதினிற் வேட தணிவர் விசயற் குருவம் பீட தணிமணி மாடப் பிரம |
1.117.1 |
பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக் கணை அருளியவர்.
1260 |
கற்றைச் சடையது கங்கண முன்கையிற் பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் |
1.117.2 |
கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.
1261 |
கூவிளங் கையது பேரி சடைமுடிக் தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் ஏவிளங் குந்நுத லாளையும் பாக பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய |
1.117.3 |
இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற் பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர்.
1262 |
உரித்தது பாம்பைஎயுடன்மிசை யிட்டதோ எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் |
1.117.4 |
பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர்.
1263 |
கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை |
1.117.5 |
வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச் சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று.
1264 |
சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய |
1.117.6 |
தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர்.
1265 |
காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற் மாலது வேந்தன் மழுவது பாகம் டாலது வூர்வ ரடலேற் றிருப்ப சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர |
1.117.7 |
அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர்.
1266 |
நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர் மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன் பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி |
1.117.8 |
வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவ நகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக்குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.
1267 |
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய |
1.117.9 |
நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத் தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர்.
1268 |
அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான் கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கடியணி யும்பொழிற் காழியுண் மேய |
1.117.10 |
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியுள் விளங்கும் கறைக் கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன்முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.
1269 |
கையது வெண்குழை காதது சூல எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய |
1.117.11 |
சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர்.
1270 |
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ |
1.117.12 |
உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.117.திருப்பிரமபுரம் - மொழிமாற்று , உடைய, இறைவர், கையில், மேவிய, விளங்கும், உடையவர், கொண்டவர், அழகிய, ஏந்தியவர், பூண்டவர், அணிந்தவர், இனிய, உமையம்மையை, புண்ணியரே, சூடுபவர், உடுத்தவர், கோவணம், கண்டிலன், திருப்பிரமபுரம், கொண்ட, திருமுறை, மொழிமாற்று, கற்றைச், எழுந்தருளிய, பூந்தராய், ஆடுபவர், தவமுனிவர்கள், இலங்கைத், அவர், புத்தர், எய்துவர், சூழ்ந்த, பொழில்கள், பாகமாகக், சிவபிரான், ஏற்றினை, மிக்க, கூடிய, காதில், பாம்பை, கையது, அணிகலனாகப், திருச்சிற்றம்பலம், தேவாரப், பதிகங்கள், பேரி, பூண்டது, திருமேனிமேல், தக்கை, சூடுவர், தக்கனை, உரித்தவர், புண்ணியராகிய, என்னும், கொட்டுபவர்