முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.112.திருச்சிவபுரம்
1.112.திருச்சிவபுரம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1207 |
இன்குர லிசைகெழும் யாழ்முரலத் தன்கர மருவிய சதுரனகர் பொன்கரை பொருபழங் காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே. |
1.112.1 |
இனிய ஒலியும் இசையும் பொருந்திய யாழ் முரலுமாறு தனது கரத்தின்கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர், அழகிய கரையினை மோதும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரமாகும்.
1208 |
அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப் பொன்றிட வுதைசெய்த புனிதனகர் வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே. |
1.112.2 |
முற்காலத்தில் மார்க்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனதுநகர், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும் வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால், முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு செய்த தலமாகிய சிவபுரமாகும். (திருமால் வெண்ணிறப் பன்றியாகத் திரு அவதாரம் செய்த செய்தி தேவாரத்திலேயே உள்ளது. திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை.)
1209 |
மலைமகண் மறுகிட மதகரியைக் கொலைமல்க வுரிசெய்த குழகனகர் அலைமல்கு மரிசிலி னதனயலே சிலைமல்கு மதிளணி சிவபுரமே. |
1.112.3 |
மலைமகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர், அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.
1210 |
மண்புன லனலொடு மாருதமும் விண்புனை மருவிய விகிர்தனகர் பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச் செண்பக மலர்பொழிற் சிவபுரமே. |
1.112.4 |
மண், புனல், அனல், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர், பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்து சிவபுரமாகும்.
1211 |
வீறுநன் குடையவள் மேனிபாகம் கூறுநன் குடையவன் குளிர்நகர்தான் நாறுநன் குரவிரி வண்டுகிண்டித் தேறலுண் டெழுதரு சிவபுரமே. |
1.112.5 |
அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவனாகிய சிவ பிரானது குளிர்ந்த நகரம், மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்.
1212 |
மாறெதிர் வருதிரி புரமெரித்து நீறது வாக்கிய நிமலனகர் நாறுடை நடுபவ ருழவரொடும் சேறுடை வயலணி சிவபுரமே. |
1.112.6 |
பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.
1213 |
ஆவிலைந் தமர்ந்தவ னரிவையொடு மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான் பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச் சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. |
1.112.7 |
பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.
1214 |
எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் முழுவலி யடக்கிய முதல்வனகர் விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. |
1.112.8 |
அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர், விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும்.
1215 |
சங்கள வியகையன் சதுர்முகனும் அங்கள வறிவரி யவனகர்தான் கங்குலும் பறவைகள் கமுகுதொறும் செங்கனி நுகர்தரு சிவபுரமே. |
1.112.9 |
சங்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர், இரவிலும் பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும்.
1216 |
மண்டையிற் குண்டிகை மாசுதரும் மிண்டரை விலக்கிய விமலனகர் பண்டமர் தருபழங் காவிரியின் தெண்டிரை பொருதெழு சிவபுரமே. |
1.112.10 |
உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடு திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.
1217 |
சிவனுறை தருசிவ புரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன் தவமல்கு தமிழிவை சொல்லவல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே. |
1.112.11 |
சிவபெருமான் எழுந்தருளிய சிவபுர நகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓத வல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.112.திருச்சிவபுரம் , சிவபுரமே, சிவபுரமாகும், நகர், வளம், திருமுறை, மிக்க, கொண்ட, விளங்கும், வந்து, முற்காலத்தில், திருச்சிவபுரம், சிவபிரானது, மருவிய, பொருந்திய, நாற்றுநடும், மகளிர், உழவர்களோடு, நிமலனது, எரித்து, நீறாக்கிய, பலரைக், சேற்று, வயல்களால், கவுணியர், திரிபுரங்களை, சிவகதி, பறவைகள், குண்டிகை, பெறுவதாகிய, அழகு, சூழ்ந்து, அழகிய, பழமையான, வலிய, தனது, காவிரியின், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், பன்றியாகத், திருமால், மாறுபட்டுத், தன்னை, எதிர்த்துவந்த, உணர்வோடு, பகைமை, செய்த, அலைகள், வண்டுகள், அசுரர்களின்