முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.102.சீகாழி
1.102.சீகாழி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1102 |
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கரவாவண்கைக் கற்றவர்சேருங் அரவாரரையா வவுணர்புரமூன் சரவாவென்பார் தத்துவஞானத் |
1.102.1 |
ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலி மிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.
1103 |
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் கைபோல்வாழை காய்குலையீனுங் மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண் ஐயாவென்பார்க் கல்லல்களான |
1.102.2 |
சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும், தொங்குகின்ற வாயையும், முரண்படுதலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள்காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப் பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.
1104 |
இளகக்கமலத் தீன்களியங்குங் களகப்புரிசைக் கவினார்சாருங் அளகத்திருநன் னுதலிபங்கா றுளகப்பாடு மடியார்க்குறுநோ |
1.102.3 |
முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப்பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.
1105 |
எண்ணார்முத்த மீன்றுமரகதம் கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் பெண்ணோர்பாகா பித்தாபிரானே நண்ணாவினைகள் நாடொறுமின்பம் |
1.102.4 |
அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப் பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.
1106 |
மழையார்சாரற் செம்புனல்வந்தங் கழையார்கரும்பு கண்வளர்சோலைக் உழையார்கரவா வுமையாள்கணவா குழையாவென்று கூறவல்லார்கள் |
1.102.5 |
மேகங்கள் தங்கிய குடதிசை மலைச் சாரல்களிலிருந்து சிவந்த நிறமுடைய தண்ணீர் வந்து அடிகளை வருட, அதனால்மூங்கில் போன்று பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க சீகாழிப் பதியில் எழுந்தருளிய மானேந்திய கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.
1107 |
குறியார்திரைகள் வரைகணின்றுங் கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் வெறியார்கொன்றைச் சடையாவிடையா அறியாவினைக ளருநோய்பாவம் |
1.102.6 |
தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித் தண்டுகளின் சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம் மிக்க காழிப் பதியில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
1108 |
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் கலங்கள் வந்து கார்வயலேறுங் இலங்கைமன்னன் றன்னையிடர்கண் சலங்கொள்சென்னி மன்னாவென்னத் |
1.102.8 |
வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத்தவம் கைகூடும்.
1109 |
ஆவிக்கமலத் தன்னமியங்குங் காவிக்கண்ணார் மங்கலமோவாக் பூவிற்றோன்றும் புத்தேளொடுமா மேவிப்பரவு மரசேயென்ன |
1.102.9 |
ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்துபரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.
1110 |
மலையார்மாட நீடுயரிஞ்சி கலையார்மதியஞ் சேர்தருமந்தண் தலைவாசமணர் சாக்கியர்க்கென்று நிலையாயென்னத் தொல்வினையாய |
1.102.10 |
மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.
1111 |
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங் அடிகள்தம்மை யந்தமின்ஞான படிகொள்பாடல் வல்லவர் தம்மேற் |
1.102.11 |
தேன் மணங் கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழு நீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக்கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப் பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞான சம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.102.சீகாழி , உடைய, கலிக்காழி, மிக்க, வந்து, காழிப், பதியில், விளங்கும், அழகிய, வரும், ஆரவாரம், நிறைந்த, திருமுறை, தாமரை, வினைகள், சீகாழி, ஒலிமிக்க, எழுந்தருளிய, அடிகளை, சேரும், மேகங்கள், போற்ற, சீகாழியில், மேல், மலர், போகும், சம்பந்தன், வல்லவர்கள், பொருந்திய, வாழும், மறையோனே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், தலைவனே, என்பவர்களை, உமையம்மையின், கணவனே, தேன், கழிசூழக், அடையா, கலிக்காழிப்