முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.101.திருக்கண்ணார்கோயில்
1.101.திருக்கண்ணார்கோயில்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர்.
தேவியார் - முருகுவளர்கோதையம்மை.
1091 |
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் பெண்ணாணாய பேரருளாளன் கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் நண்ணாவாகுந் நல்வினையாய |
1.101.1 |
குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.
1092 |
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் கொந்தலர்சோலைக் கோகிலமாடக் செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் |
1.101.2 |
மணம் பொருந்திய சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தௌந்த நீரையுடைய மண்ணியாற்றால் வளம் பெறும் வயல்களால் சூழப்பட்டு, கொத்துக்களாக விரிந்த மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச் செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது திருக்கண்ணார் கோயிலாகும்.
1093 |
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கல்லியலிஞ்சி மஞ்சமர்கண்ணார் |
1.101.3 |
பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும் ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும், மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி விளங்குவதும், கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.
1094 |
தருவளர்கானந் தங்கியதுங்கப் மருவளர்கோதை யஞ்சவுரித்து குருவளரால நீழலமர்ந்தீங் கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் |
1.101.4 |
மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மர நிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரை செய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவறையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.
1095 |
மறுமாணுருவாய் மற்றிணையின்றி செறுமாவலிபாற் சென்றுலகெல்லா குறுமாணுருவன் றற்குறியாகக் கறுமாகண்டன் மேயதுகண்ணார் |
1.101.5 |
வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.
1096 |
விண்ணவருக்காய் வேலையுணஞ்சம் உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் |
1.101.6 |
விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனி போல்பவனை நண்ணிவழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும் துன்பங்கள் இல்லை.
1097 |
முன்னொருகாலத் திந்திரனுற்ற பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் |
1.101.7 |
முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார் கோயில் என்பர்.
1098 |
பெருக்கெண்ணாத பேதையரக்கன் நெருக்குண்ணாத்தன் னீள்கழனெஞ்சில் முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் |
1.101.8 |
அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்கமுடியாத, ஒளியினை உடைய வாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற்றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.
1099 |
செங்கமலப்போ திற்றிகழ்செல்வன் அங்கமலக்கண் ணோக்கரும்வண்ணத் தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் அங்கமலத்தோ டேத்திடவண்டத் |
1.101.9 |
செந்தாமரைப் போதில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள் கமலம் போன்ற கண்களால் நோக்கிக் காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.
1100 |
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் சோறுடையார்சொற் றேறன்மின்வெண்ணூல் ஏறுடையன்பர னென்பணிவானீள் ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் |
1.101.10 |
குலைகளை ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.
1101 |
காமருகண்ணார் கோயிலுளானைக் பூமருசோலைப் பொன்னியன்மாடப் நாமருதொன்மைத் தன்மையுண்ஞான பாமருபாடல் பத்தும்வல்லார்மேற் |
1.101.11 |
அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறை புகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞான சம்பந்தன் பாடிப் பரவிய ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.101.திருக்கண்ணார்கோயில் , பொருந்திய, சிவபிரான், கோயிலே, கண்ணார், உடைய, திருக்கண்ணார், விளங்கும், வரும், கோயிலாகும், தலமாகிய, திருமுறை, கோயில், வீற்றிருக்கும், திருக்கண்ணார்கோயில், சம்பந்தன், செய்த, அருள், அவனுக்கு, மேல், வழிபட, அழகிய, நிறைந்த, நீங்கப், புகழை, என்னும், கண்ணார்கோயில், குளிர்ந்த, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், மணம், விரிந்த, பெரிய, கோயிலை, வளர்ந்துள்ள, என்பர், இடம், சென்று