மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர। அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:॥ 3.19 |
செய்ய வேண்டிய வேலைகளை எப்போதும் பற்றற்றவனாக நன்றாக செய், ஏனெனில் பற்றற்று வேலை செய்பவன் மேலான நிலையை அடைகின்றான்.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:। லோகஸம்க்ரஹமேவாபி ஸம்பஷ்யந்கர்துமர்ஹஸி॥ 3.20 |
ஜனகர் முதலானோர் கர்மத்தாலேயே முக்தியை அடைந்தார்கள், உலகத்தை நல்வழியில் நடத்துவதை மனதில் கொண்டு வேலை செய்ய கடமைபட்டிருக்கிறாய்.
யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:। ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21 |
மேன்மக்கள் செய்வதையே மற்ற மனிதர்கள் செய்கின்றனர். அவர்கள் எதை அடிப்படையாக கொள்கிறார்களோ அதையே உலகம் பின்பற்றுகிறது.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந। நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி॥ 3.22 |
அர்ஜுனா ! மூன்று உலகங்களிலும் கடமை என்று எனக்கு எதுவும் இல்லை. நான் அடைய வேண்டியதும் எதுவும் இல்லை. எனினும் நான் தொடர்ந்து வேலையில் ஈடுபடுகிறேன்.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:। மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 3.23 |
அர்ஜுனா ! நான் ஓய்வின்றி எப்போதும் வேலையில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் நிச்சயமாக என்னுடைய வழியையே பின்பற்றுவார்கள்.
உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்। ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:॥ 3.24 |
நான் வேலை செய்யாவிட்டால் இந்த உலகங்கள் அழிந்து விடும். ஜாதி கலப்பிற்கும் நான் காரணம் ஆவேன். மக்களை கெடுத்தவனும் ஆவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, நான், கர்ம, பகவத்கீதை, அத்தியாயம், மூன்றாவது, வேலை, யோகம், ஸ்ரீமத், எதுவும், ஆவேன், இல்லை, வேலையில், அர்ஜுனா, செய்ய, bhagavad, gita, இந்து, எப்போதும், மனிதர்கள்