பதிற்றுப்பத்து - பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழா அன் வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன், வெரு வரு தானையொடு வெய்துறச் செய்து சென்று, இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ, அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, |
5 |
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும், வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று, வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி, மந்திர மரபின் தெய்வம் பேணி, |
10 |
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரை அறு கேள்விப் புரோசு மயக்கி, அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த வெந் திறற் பூதரைத் தந்து, இவண் நிறீஇ, ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு, |
15 |
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல் இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு. |
அவைதாம்: நிழல் விடு கட்டி, வினை
நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை,
வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக்
கூந்தல், வலி கெழு தடக் கை, இவை பாட்டின் பதிகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - பதிகம் , பதிகம், இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, மரபின், வெந், நவில், யானை, தந்து, ஆண்ட, எட்டுத்தொகை, சங்க, மையூர், பெருஞ்