பதிற்றுப்பத்து - 90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வலி கெழு தடக் கை
மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப, அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்று, கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா |
5 |
ஒளிறு வாள் வய வேந்தர் களிறொடு கலம் தந்து, தொன்று மொழிந்து தொழில் கேட்ப, அகல் வையத்து பகல் ஆற்றி, மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர, |
10 |
வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு, அறன் வாழ்த்த நற்கு ஆண்ட விறல் மாந்தரன் விறல் மருக!- ஈரம் உடைமையின், நீர் ஓரனையை; அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை; |
15 |
கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை; பல் மீன் நாப்பண் திங்கள் போல, பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை உரு கெழு மரபின் அயிரை பரவியும், கடல் இகுப்ப வேல் இட்டும், |
20 |
உடலுநர் மிடல் சாய்த்தும், மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி, பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் உம்பல்! கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! |
25 |
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே! எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை! இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந! வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே! |
30 |
உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு, மாண் வினைச் சாபம் மார்புற வாங்கி, ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை, வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின், மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில், |
35 |
ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு, காழ் எஃகம் பிடித்து எறிந்து, விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை, காஞ்சி சான்ற வயவர் பெரும! வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே! |
40 |
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின், பழன மஞ்ஞை மழை செத்து ஆலும், தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி, வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க, கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப, |
45 |
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக், காவிரிப் படப்பை நல் நாடு அன்ன, வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை, ஆறிய கற்பின், தேறிய நல் இசை, வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!- |
50 |
'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள் யாண்டு ஓரனைய ஆக! யாண்டே ஊழி அனைய ஆக! ஊழி வெள்ள வரம்பின ஆக!' என உள்ளி, காண்கு வந்திசின், யானே-செரு மிக்கு |
55 |
உரும் என முழங்கும் முரசின், பெரு நல் யானை, இறை கிழவோயே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல் , இலக்கியங்கள், கெழு, வாழ்த்துதல், திங்கள், மன்னவனது, கூறி, மீன், பதிற்றுப்பத்து, கொடையும், பெருமையும், தண்ணளியும், உடன், சுற்றம், தழாலும், விறல், அனையை, அனைய, கடல், வயவர், அன்ன, வண்ணமும், சங்க, எட்டுத்தொகை, பெயர், தடக், வாள், துணைத், விசும்பு