குறுந்தொகை - 387. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றல் வேண்டும்” என்றுவற்புறுத்திய தோழிக்கு, “மாலைக்காலமும் யாமமும் எனக்குத் துன்பத்தைத் தருவனவாயின” என்று தலைவி கூறியது)
எல்லை கழிய முல்லை மலரக் கதிர்சினந் தணிந்த கையறு மாலையும் இரவரம் பாக நீந்தின மாயின் எவன்கொல் வாழி தோழி கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. |
5 |
- கங்குல் வெள்ளத்தார். |
தோழி! பகல் நீங்க முல்லைக் கொடிகள் மலர சூரியனது வெப்பம் குறைந்த செயலறுதற்குரிய மாலைக் காலத்தையும் இராப்பொழுது எல்லையாக எண்ணி அது வருமட்டும் கடந்தோமாயின் அதன்மேல் வரும் அவ்விரவின் மிகுதி கடலைக் காட்டிலும் பெரியது; நாம் மாலையைநீந்துவதால் வரும் பயன் யாது?
முடிபு: தோழி, மாலையும் நீந்தினமாயின் கங்குல் வெள்ளம் பெரிது; எவன்கொல்?
கருத்து: மாலையும் யாமமும் தலைவரது பிரிவை நினைவுறுத்தித் துன்பம் செய்வனவாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 387. முல்லை - தலைவி கூற்று, முல்லை, இலக்கியங்கள், தலைவி, கூற்று, தோழி, கங்குல், குறுந்தொகை, மாலையும், வெள்ளம், வரும், யாமமும், எட்டுத்தொகை, சங்க, எவன்கொல்