குறுந்தொகை - 314. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த விடத்து வேறுபட்டதலைவியை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்தது; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல் தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப் பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும் வாரார் வாழி தோழி வரூஉம் இன்னுறழ் இளமுலை ஞெமுங்க |
5 |
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே. | |
- பேரிசாத்தனார். |
தோழி! துன்பத்தைச்செய்யும் இடங்களையுடைய பாலைநிலத்தைக் கடந்து சென்றவர் நெடுந்தூரம் உயர்ந்த வானத்தின்கண் நீர்மிக்க நிறைந்த கருப்பத்தையுடைய தண்ணிய முழக்கத்தையுடைய மேகம் ஒள்ளிய மின்னலின் ஒளிவிட்டு விளங்க மழைபெய்து இருண்ட தனிமையைக் கொண்ட மாலைக்காலத்திலும் வளருகின்ற மின்னுதல் மிக்க இளைய முலைகள் அழுந்தும்படி தழுவுதற்கு வாராராயினார்.
முடிபு: தோழி, சுரனிறந்தோர் ஞெமுங்க மாலையும் வாரார்.
கருத்து: கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 314. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, தோழி, குறுந்தொகை, வாரார், ஞெமுங்க, மாலையும், கார்ப்பருவம், எட்டுத்தொகை, சங்க, அவர், வந்திலர்