குறுந்தொகை - 234. முல்லை - தலைவி கூற்று
(பருவ வரவின்கண் தோழியை நோக்கி, ”மாலைக்காலம் என்றுதனியே ஒன்றை வரையறுத்துச் சிலர் கூறுவர். தமியராயினார்க்கு எல்லாப்பொழுதும் மாலைப் பொழுதே” என்று தலைவி கூறியது.)
சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந் தெல்லறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார் மயங்கி யோரே குடுமிக் கோழி நெடுநக ரியம்பும் பெரும்புலர் விடியலு மாலை |
5 |
பகலும் மாலை துணையி லோர்க்கே. | |
- மிளைப்பெருங் கந்தனார். |
தோழி! அறிவு மயங்கியோர் சூரியன் மறைந்து சென்றவானம் சிவப்பு நிறத்தை அடைய துன்பம்மிக்கு ஒளி மங்கிய பொழுதில் முல்லைப் பூ மலர்கின்ற மாலைக் காலம் என்று அதனை வரையறுத்துக்கூறுவர்; துணைவரைப் பிரிந்தவர்களுக்கு நீண்ட நகரத்தில் உச்சிக் கொண்டையை உடைய கோழி கூவுகின்ற பெரிய இராப் பொழுது புலர்கின்றவிடியற் காலமும் மாலைக் காலமாகும்; பகற் காலமும் மாலைக் காலமாகும்.
முடிபு: மயங்கியோர் முல்லை மலரும் மாலையென்மனார்;துணையிலோர்க்கு விடியலும் மாலை; பகலும் மாலை.
கருத்து: தலைவரைப் பிரிந்தமையால் நான் எப்பொழுதும்துன்பத்தை உடையவளானேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 234. முல்லை - தலைவி கூற்று, மாலை, முல்லை, தலைவி, இலக்கியங்கள், குறுந்தொகை, கூற்று, மாலைக், காலமாகும், மயங்கியோர், காலமும், மலரும், எட்டுத்தொகை, சங்க, கோழி, பகலும்