குறுந்தொகை - 233. முல்லை - தலைவன் கூற்று
(தலைவியை மணந்து கொள்ளாமல் வினைமேல் பிரிந்து சென்றதலைவன் மீண்டு வருகையில் பாகனுக்குத் தலைவியினது ஊரைக்காட்டியது.)
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் |
5 |
வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே! |
|
- பேயனார். |
பாக! பெரியவர்களுக்கு நீரொடு தானம் பண்ணி எஞ்சியபொருளையும் யாவருக்கும் தடை செய்தலை அறியாத சோற்றையும்உடைய வரிசைப்பட்ட திரட்சியைஉடைய குறிய வளைகளை அணிந்த தலைவியினுடைய தந்தைக்குரிய ஊரானது கவலைக் கிழங்கைக் கல்லியதனால்உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழி கொன்றையினது ஒள்ளிய மலர் பரவப்பெற்று செல்வருக்குரிய பொன்னையிட்டு வைக்கும் பெட்டியினது மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட முல்லை நிலத்தின் கண்ணது.
முடிபு: குறுந்தொடியின் தந்தையூர், புறவினது.
கருத்து: முல்லை நிலத்தின் இடையே தோன்றும், அதுவே தலைவியின்ஊராகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 233. முல்லை - தலைவன் கூற்று, முல்லை, இலக்கியங்கள், குறுந்தொகை, தலைவன், கூற்று, உடைய, நிலத்தின், எட்டுத்தொகை, சங்க, நீரொடு