குறுந்தொகை - 230. நெய்தல் - தோழி கூற்று
(தலைவனது குறையைக் கேட்ட தோழி தலைவிபால், “நெடுநாட்களாக நினது உடம்பாட்டை எதிர்நோக்கி வந்து கொண்டிருந்த தலைவன் யான் சேட்படுத்தியமையின் சில காலமாக வாரா தொழிந்தான்” என்று இரக்கம் வரும்படி கூறியது.)
அம்ம வாழி தோழி கொண்கன் தானது துணிகுவ னல்லன் யானென் பேதை மையாற் பெருந்தகை கெழுமி நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ வயச்சுறா வழங்குநீர் அத்தம் |
5 |
சின்னாள் அன்ன வரவறி யானே. | |
- அறிவுடை நம்பியார். |
தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக; தலைவன் வலியை உடைய சுறா மீன் வழங்குகின்றநீரை உடைய வழியில் சில நாட்களாக முன்னர் வந்து கொண்டிருந்த அத்தகைய வருதலை அறியானாயினான்; அங்ஙனம் வாராது இருத்தலைத் தானாகவேதுணிந்து ஒழுகும் இயல்புடையன் அல்லன்; யான்! என் அறிவின்மையால் பெரிய உரிமையைப் பொருந்தி அவன் வருந்தி இங்கே வாராத வண்ணம் செய்தசெயல் ஒன்றை உடையேனோ?
முடிபு: தோழி-, கொண்கன் வரவறியான்; தான் துணிகுவன் அல்லன்;யான் கெழுமிச் செய்தது உடையேன்கொல்.
கருத்து: நின்னைக் காணப் பலகால் வந்த தலைவன் யான்சேட்படுத்தியமையின் வாராதொழிந்தான்கொல்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 230. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், நெய்தல், கூற்று, யான், தலைவன், குறுந்தொகை, கொண்கன், உடைய, அல்லன், வந்து, எட்டுத்தொகை, சங்க, கொண்டிருந்த