குறுந்தொகை - 23. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியது வேறுபாட்டின் காரணத்தைச் செவிலித் தாய் முதலியோர் நெற்குறி பார்ப்பவளைக் கொண்டு ஆராய்ந்த காலத்தில் தோழி, “தலைவனுக்குரிய மலையை நீ பாடுவாயாக” என்று கூறும் வாயிலாக அத் தலைவியின் வேறுபாடு ஓர் ஆடவனால் உண்டாயிற்று என்பதைப் புலப்படுத்தியது).
அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. |
5 |
- அவ்வையார். |
தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே சங்கு மணியினால் ஆகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய நல்ல நீண்ட கூந்தலை உடைய பாட்டுக்களைப் பாடுவாயாக; இன்னும் பாட்டுப் பாடுக! நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக.
முடிபு: அகவன் மகளே, பாடுக: இன்னும் பாடுக; குன்றம் பாடிய பாட்டை இன்னும் பாடுக.
கருத்து: இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 23. குறிஞ்சி - தோழி கூற்று, பாடுக, அகவன், இன்னும், பாடிய, இலக்கியங்கள், மகளே, தோழி, குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, பாட்டை, நல்ல, குன்றத்தைப், பாடுவாயாக, பாட்டே, வேறுபாடு, எட்டுத்தொகை, நன்னெடுங், சங்க, குன்றம்