குறுந்தொகை - 22. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நின்னை அழைத்துக் கொண்டே செல்வார்” என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய யாரோ பிரிகிற் பவரே சாரற் சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அஞ்சினை கமழும் தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. |
5 |
- சேரமானெந்தை. |
மலைப் பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரை உடைய வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில் மணக்கின்ற நன்மணம் பரவிய விளக்கத்தை உடைய நெற்றியை உடையாய் துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ இங்கே தனியாகத் தங்க நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றல் உடையவர் யாவர்? தலைவர் செல்லுதல் நின்னோடே ஆகும்.
முடிபு: ஒண்ணுதல், நீ ஒழியப் பிரிகிற்பவர் யார்? செலவு நின்னொடும் ஆகும்.
கருத்து: தலைவர் நின்னைப் பிரிந்து செல்லார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 22. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, பாலை, பிரிந்து, கூற்று, குறுந்தொகை, நின்னைப், தலைவர், ஆகும், உடைய, கொண்ட, சங்க, கண்ணை, எட்டுத்தொகை, ஒண்ணுதல்