குறுந்தொகை - 209. பாலை - தலைவன் கூற்று
(பொருள்வயிற் சென்ற தலைவன் அப்பொருளைப் பெற்று மீண்டுவந்து தோழியை நோக்கி, “நான் பிரிந்த விடத்து வேறொன்றையும்நினையாமல் தலைவியின் கூட்டத்தையே நினைந்திருந்தேன்” என்றுகூறும் வாயிலாகத் தனது அன்பைத் தலைவிக்குப் புலப்படுத்தியது.)
அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய் மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும் இறப்பருங் குன்ற மிறந்த யாமே குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற் கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி |
5 |
தளையவிழ் பல்போது கமழும் மையிருங் கூந்தன் மடந்தை நட்பே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
குறுக அடியிட்டு நடக்கும் நடையையுடைய தோழி! வழிப்போவாரதுஉயிரைத் தாங்கற்குரிய அறத்தைச் செய்யும் நெல்லிமரத்தினது அழகிய பசிய காய்கள் வலியையுடைய புலிக்குட்டிகள் கொள்ளற்குரிய இடத்தில் உதிர்ந்துஉருளுகின்ற கடத்தற்கரிய மலைகளை கடந்து சென்ற யாம் அங்ஙனம்சென்றவிடத்து பல பொருள்களை நினைந்தேமல்லேம்; வழியினிடத்தே காட்டினிடத்தில் தழைத்த வளைந்தகிளைகளையுடைய வெட்சியினது முறுக்குஅவிழ்ந்த பல பேரரும்புகள் மணக்கின்ற மையைப் போன்ற கரிய கூந்தலையுடைய தலைவியினது நட்பையேநினைந்திருந்தேம்.
முடிபு: குறுநடை, யாம் பல உள்ளலம்; மடந்தை நட்பே உள்ளினேம்.
கருத்து: நான் எப்பொழுதும் தலைவியையே நினைந்திருந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 209. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, குறுந்தொகை, கூற்று, நட்பே, மடந்தை, யாம், சங்க, எட்டுத்தொகை, சென்ற, குறுநடை