குறுந்தொகை - 177. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)
கடல்பா டவிந்து கானல் மயங்கித் துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர்கொல் வாழி தோழி நாந்தப் |
5 |
புலப்பினும் பிரிவாங் கஞ்சித் தணப்பருங் காமம் தண்டி யோரே. |
|
- உலோச்சனார். |
தோழி! கடலானதுஒலி அடங்க கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக துறையையும்நீரையும் உடைய கரிய கழி பூக்கள்கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய அன்றிற் பறவையும் மெல்ல கூவும்; முன்புநாம் தம்மைப் புலந்தாலும் அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி நீங்குதற்கரிய காம இன்பத்தை அலைத்தும்பெற்றவராகிய தலைவர் இன்று வருவர்.
முடிபு: தோழி, கழி புல்லென்றன்று; அன்றிலும் நரலும்; தண்டியோர் இன்று வருவர்.
கருத்து: தலைவர் இன்று வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 177. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், இன்று, நெய்தல், குறுந்தொகை, வருவர், கூற்று, தலைவர், சங்க, எட்டுத்தொகை, அன்றிலும், நரலும்