குறுந்தொகை - 176. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)
ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ |
5 |
வேறுபுல னன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே. |
|
- வருமுலையாரித்தியார். |
ஒருநாள் வந்தானல்லன்; இரண்டு நாட்கள் வந்தானல்லன்; பல நாட்கள் வந்து பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்ததேனிறாலைப் போலப் போயினவனும் நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன் எங்கே இருக்கின்றானோ? வேற்றுப் புலங்களையுடையநல்ல நாட்டிற்பெய்த இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல என் நெஞ்சு! கலங்கும்.
முடிபு: போகியோன், எந்தை, யாண்டுளன் கொல்? என் நெஞ்சு கலிழும்.
கருத்து: நின்னை ஒரு தலைவன் விரும்பி அலமருகின்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 176. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், வந்து, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, கூற்று, நாட்கள், வந்தானல்லன், தலைவன், நெஞ்சு, யாண்டுளன், எங்கே, எட்டுத்தொகை, சங்க, இருக்கின்றானோ, ஒருநாள், வாரலன்