குறுந்தொகை - 12. பாலை - தலைவி கூற்று
(‘தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலளாயினாள்’ என்று கவலை உற்ற தோழி கேட்கும்படி, ‘‘தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்தே யான் வருந்துகின்றேன் என்பதை உணராமல் இவ்வூர், பிரிவை ஆற்றேனாயினேன் என்று வேறொன்றைக் கூறாநின்றது; இஃது என்ன பேதைமை!’’ என்று தலைவி சொல்லியது.)
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே அதுமற் றவலங் கொள்ளாது |
5 |
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. | |
- ஓதலாந்தையார். |
தலைவர் போன வழி யானது எறும்பின் வளைகளைப் போல குறுமையை உடைய பலவாகியசுனையை உடைய கொல்லனது உலைக் களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையை உடைய பாறையின் மேல் ஏறி வளைந்த வில்லை உடைய எயினச் சாதியினர் தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை உடையது என்று கண்டோர் கூறுவர் இந்த ஆரவாரத்தை உடைய ஊரானது அவ்வழியின் கொடுமையைப் பற்றித் துயரத்தை உட்கொள்ளாமல் அயற்றன்மையை உடைய சொற்களைக் கூறி இடித் துரைக்கும்.
முடிபு: அவர் சென்ற ஆறு கவலைத்து என்ப; ஊர் அவலங் கொள்ளாது கழறும்.
கருத்து:தலைவர் சென்ற வழி மிக்க கொடுமையை உடையது; அதனைத் தோழி நினைந்திலள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 12. பாலை - தலைவி கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவி, சென்ற, பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவர், உடையது, கொள்ளாது, பிரிவை, எட்டுத்தொகை, சங்க, தோழி, கொடுமையை