குறுந்தொகை - 114. நெய்தல் - தோழி கூற்று
(தலைவியைக் குறியிடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என்மகள் நுதலே. |
5 |
- பொன்னாகனார். |
இயற்றப்பட்ட தேரை உடைய தலைவ நெய்தல் நிலத்தின் கண் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்; இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றை உடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பாவையின் நெற்றியை மிதிக்கும்; ஆதலின் யாம் போகின்றோம்; அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக.
முடிபு: கொண்க, பாவை கிடப்பினென்; வந்தனென்; என் மகள் நுதல் நாரை மிதிக்கும்; செல்கம்; செல வியங்கொண்மோ.
கருத்து: தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 114. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், நெய்தல், தோழி, மிதிக்கும், குறுந்தொகை, கூற்று, நாரை, ஆரல், உடைய, செல்கம், தலைவியைக், எட்டுத்தொகை, சங்க, பாவை, வந்தனென், கொண்க