அகநானூறு - 202. குறிஞ்சி
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, புலிப் பகை வென்ற புண் கூர் யானை கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
5 |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, சிறு பல் மின்மினி போல, பல உடன் மணி நிற இரும் புதல் தாவும் நாட! யாமே அன்றியும் உளர்கொல் பானாள், உத்தி அரவின் பைத் தலை துமிய, |
10 |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி தேராது வரூஉம் நின்வயின் ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
15 |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 202. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, சிறு, எட்டுத்தொகை, சங்க