அகநானூறு - 203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், 'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், |
5 |
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும் யான் இவ் வறு மனை ஒழிய, தானே, 'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால் மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, |
10 |
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான் அன்னேன் அன்மை நன் வாயாக, மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப் புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், |
15 |
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே! |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 203. பாலை , இலக்கியங்கள், பாலை, யான், அகநானூறு, தனக்கு, சங்க, எட்டுத்தொகை, எனக்கு