உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இத்ததைய சிறந்த நாடகாசிரியர்களின் ஒருவராக விளங்கிய சரபகவி உடுமலை முத்துச்சாமி கவிராயர் குரோதன ஆண்டு, சித்திரை மாதம், 25-ஆம் நாள் சனிக்கிழமை தமது 63-ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார். திருவாரூரில் ஓடம் போக்கியாற்றின் தென்கரையில் லிங்க ஸ்தாபன சமாதியில் இவருடைய உடல் சேர்க்கப்பட்டது.
முத்துசாமிக்கவிராயர் அவர்கள் எல்லோரோடும் இனிய முறையில் பழகக்கூடியவர். சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் சிரிக்கவைக்கும் தன்மை வாய்ந்தவர். இவர் நோயுற்றுப் படுக்கையிலிருந்த போது இவரைப் பார்க்க வந்த மருத்துவர் ஒருவர். தேகம் எப்படி இருக்கிறது? கவிராயர் ஐயா! என்றாராம்.
'தேகம் சந்தேகம்' என்றார் கவிராயர்.
மற்றொரு தமிழ் மருத்துவர் கவிராயரின் கால் வீக்கம் தணிய சிகிச்சை செய்ய வந்தார். அந்த மருத்துவரிடம்,
'ஐயா, வைத்தியரே! கால் வலி மிகவும் துன்புறுத்துகிறது' என்றாராம் கவி.
மருத்துவர், 'முன்போல் அதிகம் வலியிருக்காது என நினைக்கிறேன்' என்றாராம். உடனே கவிராயர், 'இல்லை, முன்போல் முழுவலி போய்விட்டது. கால் வலிதான் இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே மருத்துவர் விடைபெற்றராம். இவ்வாறாகப் பல செய்திகள் இவரது மாணக்கார்களில் ஒருவரான சுந்தான கிருஷ்ண நாயுடு அவர்கள் என்னிடம் விரிவாகக் கூறக் கேட்டிக்கிறேன்.
அனந்த நாராயணய்யர் அவர்கள் கவிராயரின் பாடல் பாடல்களில் மிகவும் பிரேமை உடையவர். என்னுடைய இளமைப் பருவத்தில் இப்பெயர்களை எல்லாம் நான் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றபோது கவிராயர் அவர்களைப்பற்றி இன்னும் எத்தனையோ செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார் ஆகிய தமிழ் நாடகத் துறைக்கு அருப்பணியாற்றிய இருபெரும் நாடகாசிரியர்களைத் தவிர மறைந்துபோன மற்றும் நாடகப் புலவர்கள் பலரை மீண்டும் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்பது சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுமன்றத்தின் திட்டங்களில் ஒன்று. அந்த வரிசையிலே குறிப்பிடத்தக்க ஒரு நாடகப் புலவர் உடுமலைச் சந்தச் சரபம் முத்துசாமிக் கவிராயர்.
கவிராயர் திருநாமம் வாழ்க!
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள், கவிராயர், மருத்துவர், உடுமலை, முத்துசாமிக்கவிராயர், கால், கட்டுரைகள், கலைக், என்றாராம், நடிகன், நாடகக், முன்போல், மிகவும், சங்கரதாஸ், நாடகப், சுவாமிகள், அந்த, செய்திகள், தேகம், arts, drama, கலைகள், இருக்கிறது, தமிழ், கவிராயரின்