குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று
(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)
| மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே. |
|
| - பாலை பாடிய பெருங் கடுங்கோ. |
மென்மைத் தன்மையையுடைய அரிவையே நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த நின்னைப் பிரிந்து சென்று சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின் யான் அங்ஙனம் செல்வதற்குற்ற தக்க வினையின் கண் என்னை நீங்கி இரப்போர் வாராத நாட்கள் பல வாகுக!
முடிபு: அரிவை, நின் அகம் புலம்ப நிற்றுறந்து அமைகுவெனாயின் யான் செலவுறு தகவு இரவலர் வாரா வைகல் பலவாகுக.
கருத்து: நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவன், கூற்று, யான், குறுந்தொகை, செலவுறு, நின், வைகல், நின்னைப், வாரா, எட்டுத்தொகை, புலம்ப, சங்க