10. பத்தியுடைமை - ஞானக் குறள்

பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது. |
91 |
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். |
92 |
அன்பா லழுது மலறியு மாள்வானை யென்புருகி யுள்ளே நினை. |
93 |
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா லீசனைத் தேடு. |
94 |
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில் உண்ணுமே யீச னொளி. |
95 |
நல்லானப் பூசித்து நாதனென வுருகில் நில்லதோ வீச னிலை. |
96 |
அடியார்க் கடியராயன் புருகித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல். |
97 |
ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீ நினைந்துகொள |
98 |
மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து பொய்ம்மையி லீசனைப் போற்று. |
99 |
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே அறிந்தரனை யாய்ந்து கொளல். |
100 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
10. பத்தியுடைமை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - கொளல், யுள்ளே