ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா
வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா
கோயில் - துச்சான
205 |
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார் கைச்சாலும் சிறுகதலி இவேம்பும் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! |
1 |
206 |
தம்பானை சாய்ப்பற்றூர் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன் வம்பானார் பணிஉகத்தி வழிபடியேன் தொழிலிறையும் நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! |
2 |
207 |
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத் திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும் இசையானால் என்திறத்தும் எனயுடையாள் உரையாடாள் நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! |
3 |
208 |
ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாவித் தொழும்பனைத்தும் பிரான்இகழும் என்பித்தாய் நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. |
4 |
209 |
நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன் ஒன்றியரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய் கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய் நன்றிதுவோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. |
5 |
210 |
படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான் அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஒத்தன்றே இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல் நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. |
6 |
211 |
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய் கண்ணாகா(து) ஒழிதலும்நான் மிகக்கலங்கி அண்ணாவோ என்றண்ணாந்(து) அலமந்து விளித்தாலும் நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. |
7 |
212 |
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யில் கூடாமே கைவந்து குறுகுமா(று) யான்உன்னை நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. |
8 |
213 |
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத் தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும் ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும் நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. |
9 |
214 |
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டனெடுத்(து) ஓவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத் தேவேதென் திருத்தில்லைக் கூத்தாடி நாயடியேன் சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்கு தடுப்பரிதே. |
10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா , நடம்பயிலும், நம்பானே, திருத்தில்லை, திருவிசைப்பா, அருளிய, வேணாட்டடிகள், திருமுறை, ஒன்பதாம், இல்லாமை, துச்சான