ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.076.திருவாஞ்சியம்
7.076.திருவாஞ்சியம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர்.
தேவியார் - வாழவந்தநாயகி.
771 |
பொருவ னார்புரி நூலர் மருவ னார்மரு வார்பால் திருவ னார்பணிந் தேத்துந் ஒருவனார் அடி யாரை |
7.076.1 |
நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர்; முப்புரி நூலை அணிபவர்; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர்; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர்.
772 |
தொறுவில் ஆன்இள ஏறு செறுவில் வாளைகள் ஓடச் கறுவி லாமனத் தார்கள் மறுவி லாதவெண் ணீறு |
7.076.2 |
பசுக் கூட்டத்துள், இளைய ஆனேறு, கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி, வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும், செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும், பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல், சிறந்ததொரு கருத்தை உடையது.
773 |
தூர்த்தர் மூவெயில் எய்து பார்த்த னார்திரள் தோள்மேற் தீர்த்த மாமலர்ப் பொய்கைத் சாத்து மாமணிக் கச்சங் |
7.076.3 |
தீர்த்தமாகிய, சிறந்த, பூக்களையுடைய பொய்கைகளையுடைய, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை, சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து, ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி, தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு, ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது; இது வியப்பு!
774 |
சள்ளை வெள்ளையங் குருகு வள்ளை வெண்மலர் அஞ்சி துள்ளு தௌளுநீர்ப் பொய்கைத் வெள்ளை நுண்பொடிப் பூசும் |
7.076.4 |
'சள்ளை' என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை, வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று, பின், வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தௌவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர்.
775 |
மைகொள் கண்டர்எண் தோளர் கொய்த கூவிள மாலை கைதை நெய்தலங் கழனி பைதல் வெண்பிறை யோடு |
7.076.5 |
கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும், பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய, நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில், தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற, புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு, இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு.
776 |
கரந்தை கூவிள மாலை பரந்த பாரிடஞ் சூழ திருந்து மாடங்கள் நீடு மருந்த னார்அடி யாரை |
7.076.6 |
தம் இயல்பு காரணமாக, கரந்தைப் பூவினாலும், கூவிள இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும், நம் இறைவரும் ஆகிய, திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர், தம் அடியாரை, வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர்.
777 |
அருவி பாய்தரு கழனி குருவி யாய்கிளி சேர்ப்பக் பருவ ரால்குதி கொள்ளும் இருவ ரால்அறி யொண்ணா |
7.076.7 |
மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர், நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும், கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால், குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய்களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற, பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், 'மால், அயன்' என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது, ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம்.
778 |
களங்க ளார்தரு கழனி உளங்க ளார்கலிப் பாடல் குளங்க ளால்நிழற் கீழ்நற் விளங்கு தாமரைப் பாதம் |
7.076.8 |
ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர, அதனால் மகிழ்வுற்ற வண்டுகள், கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை, மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை, குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரது, ஒளி வீசுகின்ற, தாமரை மலர்போலும் திருவடிகளை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர்.
779 |
வாழை யின்கனி தானும் கூழை வானரந் தம்மிற் தாழை வாழையந் தண்டாற் ஏழை பாகனை யல்லால் |
7.076.9 |
வாழைப் பழங்களையும், சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும், 'எனக்கு வைத்த இப் பங்கு சிறிது' என்று இகழ்ந்து, அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து, தாழை மட்டையும், வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை, யாம், 'கடவுள்' என்று நினைத்தல் இலம்.
780 |
செந்நெ லங்கலங் கழனித் மின்ன லங்கலஞ் சடையெம் பொன்ன லங்கல்நன் மாடப் பன்ன லங்கனன் மாலை |
7.076.10 |
செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும், இனிய மாலைகளை யணிந்த சடையையுடைய எம் இறைவனது, ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த, பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய, சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது, பல அழகுகளையுடைய, கற்கத்தகுந்த நல்ல பாமாலையை, அடியராய் உள்ளவர்களே, பாடுமின்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.076.திருவாஞ்சியம் , திருவாஞ்சியத்தில், எழுந்தருளியிருக்கும், வாஞ்சியத், விளங்குகின்ற, உடைய, புகழால், ஒலிக்கின்ற, தடிகள், இறைவர், மாலை, கழனி, திருமுறை, திருவாஞ்சியம், அஞ்சி, நல்ல, திகழ்திரு, பொய்கைத், ஆகிய, கூவிள, துறையும், வெண்மையான, சென்று, துள்ளுகின்ற, தாழை, மாடங்கள், தறைகழல், இறைவரது, நினைப்பவர், இயல்பு, வீசுகின்ற, கழனிகளில், மணம், வாழை, கருதி, அழகிய, உள்ள, யாரை, ஊழ்வினை, நலியஒட், வருவதும், திருச்சிற்றம்பலம், ஏழாம், தேவாரப், பதிகங்கள், டாரே, வந்து, வெள்ளிய, பூக்களையுடைய, சள்ளை, பொருந்திய, தாமரைப், ஒட்டாது, பூசுதல், இளைய, குருகு