ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.073.திருவாரூர்
7.073.திருவாரூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
740 |
கரையுங் கடலும் மலையுங் உரையில் விரவி வருவான் வரையின் மடமகள் கேள்வன் அரையன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.1 |
தொண்டீர், நிலம், கடல், மலை முதலாய எவ்விடத்திலும், காலை, மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்திவருபவனும், ஒப்பற்றவனும், உருத்திர லோகத்தை உடையவனும், மலையின் இளமையான மகளுக்குக் கணவனும், தேவர், அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
741 |
தனியன்என் றெள்கி யறியேன் முனிபவர் தம்மை முனிவன் கனிகள் பலவுடைச் சோலைக் இனியன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.2 |
தொண்டீர், இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை, யான், 'தாயும், தந்தையும், பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன்' என்று இகழ்ந்தறியேன்; அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன்; அவனை வெறுப்பவரை வெறுப்பேன்; மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற்களைச் சொல்லேன்; அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலைகளை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
742 |
சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் கல்லில் வலிய மனத்தேன் அல்லல் பெரிதும் அறுப்பான் எல்லை இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.3 |
தொண்டீர், யான் யாதேனும் ஒன்று சொல்வதாயின், எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன். அயலவர்க்கேயன்றி, உறவினர்க்கும் உதவுவேனல்லேன்; அத்துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன். கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும், அரிய வேதங்களும், ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
743 |
நெறியும் அறிவுஞ் செறிவும் மிறையுந் தறியும் உகப்பன் பிறையும் அரவும் புனலும் இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.4 |
தொண்டீர், யான், ஒழுகும் நெறியிலும், பொருள்களை அறிகின்ற அறிவிலும், பிறரோடு இணங்குகின்ற இணக்கத்திலும், சொல்லுகின்ற நீதியிலும்; மிக்கபொல்லாங்குடையேன்; பிறரை வருத்துதலையும், பிரித்தலையும் விரும்புவேன்; மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன்; பிறையையும், பாம்பையும், நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திரு
744 |
நீதியில் ஒன்றும் வழுவேன் வேதியர் தம்மை வெகுளேன் சோதியிற் சோதிஎம் மானை ஆதி இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.5 |
தொண்டீர், யான், நீதியினின்றும் சிறிதும் வழுவேன்; அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன்; அந்தணர்களை வெறுக்கமாட்டேன்; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன். ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும், எங்கட்கு யானை போல்பவனும், பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
745 |
745அருத்தம் பெரிதும் உகப்பன் ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.6 |
தொண்டீர், யான், பொருளையே பெரிதும் விரும்புவேன்; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன்; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன்; உறவாயினார்க்கும் துணைவனல்லேன்; இன்ன பலவாற்றால், பொருந்துவதாய பண்பு எனிலோ, ஒன்றேனும் இல்லாதேனாயினேன். புற்றைப்படைத்து, அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
746 |
சார்ந்தவர் தம்மடிச் சாரேன் மூவுல குந்திரி வானே கண்ணியன் விண்ணவர் ஏத்தும் எம்மையும் ஆள்வரோ கேளீர். |
7.073.7 |
தொண்டீர், யான், வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன்; இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன்; மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும், கண்ணியையும் அணிந்தவனும், தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை, போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும், அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது, திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
747 |
நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன் மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் பண்டங் கிலங்கையர் கோனைப் அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.8 |
தொண்டீர், யான், மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன்; அதனால், அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன்; வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன்; இஃது எனது துணிபும், தளர்வில்லாத குணமும் ஆகும். முன்பு, இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின்கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
748 |
நமர்பிறர் என்ப தறியேன் தமரம் பெரிதும் உகப்பேன் அமரன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.9 |
தொண்டீர், யான், இவர் நம்மவர் என்பதும், அயலவர் என்பதும் அறியமாட்டேன்; நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன்; ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன்; தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன். முருகனும், திருமாலும், பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
749 |
ஆசை பலஅறுக் கில்லேன் பேசிற் சழக்கலாற் பேசேன் ஓசை பெரிதும் உகப்பேன் ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் |
7.073.10 |
தொண்டீர், எனக்கு உள்ள அவாவோ பல; அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன்; அவ்வவாவினால் யாவரிடத்தும் வெகுளிதோன்றுதலின், எவரிடத்தும் பகைத்தே பேசுவேன்; ஒன்று சொல்லின், பொய்யல்லது சொல்லேன்; எனினும் புகழை மிக விரும்புவேன்; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன். ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின்.
750 |
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் சிந்தை செயுந்திறம் வல்லான் மந்த முழவம் இயம்பும் சந்தம் இசையொடும் வல்லார் |
7.073.11 |
வெற்றித் திருப் பொருந்திய திரண்ட தோள்களையுடையவனும், மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழுங்குவதும், வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றியவனும் ஆகிய நம்பியாரூரன் 'எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ' என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை, அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.073.திருவாரூர் , எம்மையும், அவர், இருப்பதும், ஆரூர், ஆள்வரோ, என்றும், இடமும், ஆதலின், எழுந்தருளியிருக்கின்ற, கேளீர், தொண்டீர், அவரது, யான், கேட்டறிமின், திருவுள்ளத்தைக், கொள்வாரோ, திருவாரூரே, யன்றோ, ஆகிய, ஆண்டு, விரும்புவேன், ஆண்டுகொள்வாரோ, திருவாரூரேயன்றோ, இறைவன், சொல்லேன், குந்துணை, திருமுறை, வாழ்வேன், உகப்பன், பெருமான், திருவாரூர், தேவர், திட்ட, தேவாரப், ஒன்றும், பதிகங்கள், ஏழாம், வழுவேன், ஒன்றேனும், கூடிய, வணங்கும், என்பதும், உகப்பேன், பேசேன், திரிவேன், எந்தை, கொண்ட, எனது, சொல்லிற், முதலிய, இனிய, ஈன்ற, தம்மை, கனிகள், உருத்திர, அவன், கற்ற, ஒன்று, வலிய, யல்லேன், திருச்சிற்றம்பலம், செய்து