ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.007.திருஎதிர்கொள்பாடி
7.007.திருஎதிர்கொள்பாடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்.
தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.
62 |
மத்த யானை யேறி மன்னர் செத்த போதில் ஆரு மில்லை வைத்த உள்ளம் மாற்ற வேண்டா அத்தர் கோயில் எதிர்கொள்பாடி |
7.007.1 |
மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீவிர் இறந்தால், அதுபோது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர்; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன்; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீள, இவ்வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா.
என் நெஞ்சீரே, நீரும் வாரும்; அவர்களுடன், யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்.
63 |
தோற்ற முண்டேல் மரண முண்டு மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு நீற்றர் ஏற்றர் நீல கண்டர் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி |
7.007.2 |
நினைத்தற் றன்மையை யுடைய நெஞ்சீரே, யாவர்க்கும், பிறப்பு உளதாயின், இறப்பும் ஒருதலையாக உண்டு; அவற்றிற்கு இடையே உள்ள இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே. அவ்வாழ்க்கையின் பொருட்டுச் சொல்லப்படும் சொல் உளதாயின். அதன்கண் பெரும்பாலும் வஞ்சனை உளதாவதேயாம். அதனால், அவைகளின் நீங்குதற் பொருட்டு, வெண்ணீற்றை யணிந்தவரும், இடப வாகனத்தை உடையவரும், மிக்க நீரை நீண்ட சடையிலே தாங்கியவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
64 |
செடிகொள் ஆக்கை சென்று சென்று வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட் கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர் அடிகள் கோயில் எதிர்கொள் பாடி |
7.007.3 |
நெஞ்சீரே, துன்பத்தைக் கொண்ட உடம்பானது, உலகியலில் உழன்று உழன்று மெலிந்து, விரைய வீழ்ந்தொழியாத முன்னே, மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்திற் பட்டு மயங்காது, தம் கொடி தன்னிடத்துப் பொருந்தக் கொண்ட இடபத்தை யுடையவரும், வெண்மையான நீற்றை அணிந்தவரும், கோவணமாக உடுத்த ஆடையை உடைய தலைவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
65 |
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் யாவ ராலு மிகழப் பட்டிங் மூவ ராயும் இருவ ராயும் தேவர் கோயில் எதிர்கொள் பாடி |
7.007.4 |
வஞ்சனையையுடைய நெஞ்சீரே, நமக்கு உட்பட்டவராயே ஐவர் பகைவர் வாழ்வர்; அதனால், அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில் வீழாது, தாமே மும்மூர்த்திகளாயும், தமது ஆணை வழியால் மாலும் அயனுமாயும், எவ்வாற்றானும் உலகிற்கு அவரே முதல்வராகும் முழுமுதல்வராகிய இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
66 |
அரித்து நம்மேல் ஐவர் வந்திங் சிரித்த பல்வாய் வெண்டலை போய் வரிக்கொ டுத்தி வாள ரக்கர் எரித்த வில்லி எதிர்கொள் பாடி |
7.007.5 |
நெஞ்சீரே, ஐவர் ஆறலை கள்வர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால் வாணாள் வீணாளாய்க் கழிய, மகிழ்ச்சியாற் சிரித்த பல்லினை உடைய வாய், வெண்டலையாய்ப் போய் ஊர்ப்புறத்திற் சேராத முன்பே, அழகினைக் கொண்ட படப்புள்ளிகளையுடைய பாம்பை அணிந்த, கொடிய அசுரரது பகைமை தங்கிய மதில்கள் மூன்றினையும் எரித்த வில்லையுடைய பெருமானது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
67 |
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் மையல் கொண்டீர் எம்மொ டாடி நைய வேண்டா இம்மை யேத்த ஐயர் கோயில் எதிர்கொள் பாடி |
7.007.6 |
நெஞ்சீரே, நம் இல்வாழ்க்கையை ஆளுதலுடைய சுற்றத்தார், நம்மீது நிலையற்ற அன்புடையரே; அதனை நினையாது, அவர்கள் குறையை முடித்தற் பொருட்டு நீரும் எம்மொடு கூடித் திரிந்து, மயக்கத்தையுடையீராயினீர்; இனி, அவ்வாற்றால் துன்புறுதல் வேண்டா; இப்பிறப்பில் நாம் வழிபட்டிருக்க, வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும் நம் பெருமானது திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
68 |
கூச னீக்கிக் குற்றம் நீக்கிச் வாச மல்கு குழலி னார்கள் ஆசை நீக்கி அன்பு சேர்த்தி ஈசர் கோயில் எதிர்கொள் பாடி |
7.007.7 |
நெஞ்சே, கும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து, காமம் வெகுளி முதலிய குற்றங்களை அகற்றி, யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து, மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது, வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து எலும்பை அணிதலோடு, விடையை ஊரும் இறைவரது திருக்கோயிலை அவரிடத்து அன்பு வைத்து. 'திரு எதிர் கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; அதுவே செயற்பாலது; வா.
69 |
இன்ப முண்டேல் துன்ப முண்டு முன்பு சொன்னால் மோழை மையாம் அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை என்பர் கோயில் எதிர்கொள் பாடி |
7.007.8 |
பொறியொன்றும் இல்லாத முட்டைபோலும் நெஞ்சீரே, அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில் இன்பம் உள்ளதுபோலவே துன்பமும் உளதாதல் கண்கூடு; 'அழகிய கொன்றை மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை, அவற்றிற்கு அன்பராய் உள்ளவரல்லது அடையமாட்டார்' என்று, அறிந்தோர் கூறுவர்; இவற்றை முன்பு உமக்குச் சொன்னால் நீர் உணரமாட்டாமையின், அறியாமயாய் முடியும்; ஆதலாற் சொன்னோமில்லை. இனி மனை வாழ்க்கையைக் கைவிட்டு, இறைவரது திருக்கோயிலை, 'திருஎதிர் கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
70 |
தந்தை யாருந் தவ்வை யாரு வந்து நம்மோ டுள்ள ளாவி சிந்தை யீரே னெஞ்சி னீரே எந்தை கோயில் எதிர்கொள் பாடி |
7.007.9 |
நெஞ்சீரே, தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார்; ஆதலின், நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி, எமக்கு வீட்டு நெறியைக் காட்டும் நினைவுடையீராயின், விளங்குகின்ற திங்களைச் சூடும் நம் தந்தை கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.
71 |
குருதி சோர ஆனையின் தோல் மருது கீறி ஊடு போன சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் கருது கோயில் எதிர்கொள் பாடி |
7.007.10 |
நெஞ்சீரே, யானையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்த, குழல்போலும் சடையை உடையவனும், இருமருத மரங்களை முரித்து, அவற்றின் இடையே தவழ்ந்த மாயோனும், பிரமனும் காணாத, வேதத்தை உணர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினனும், எங்கள் முதல்வனும் ஆகிய சிவபிரான் தன் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை, 'திருஎதிர்கொள்பாடி' எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; அதுவே செயற்பாலது; வாரீர்.
72 |
முத்து நீற்றுப் பவள மேனிச் பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் பத்தன் ஊரன் பாடல் வல்லார் |
7.007.11 |
முத்துப்போலும் வெள்ளிய நீற்றையும், பவளம் போலும் செய்ய திருமேனியையும், சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும், அடியவர் மனம் பிணிப்புண்ணுதலையுடைய திருஎதிர்கொள்பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின, சிவனடியானும், சிவனடியார்க்கு அடியானும், 'சடையன்' என்பானுக்கு மகனும் ஆகிய நம்பியாரூரனது இப்பாடல்களை நன்கு பாடவல்லவர், அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கியிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.007.திருஎதிர்கொள்பாடி , சென்று, திருஎதிர்கொள்பாடி, தடைவோமே, ஊரிடத்துச், யென்ப, அடைவோம், திருக்கோயிலை, பாடி, எதிர்கொள், கோயில், நெஞ்சீரே, எனப்படுவதாகிய, வாரீர், இறைவரது, கொண்ட, மனத்தீரே, வேண்டா, ஆகிய, வஞ்ச, வந்து, ஐவர், திருமுறை, நமக்கு, உடைய, உள்ள, இடையே, மனைவாழ்க்கை, முண்டேல், வைத்த, முண்டு, நீரும், போய், முன்பு, நீர், நம்மேல், சொன்னால், கொன்றை, எரித்த, சிரித்த, அதுவே, பெருமானது, அன்பு, கொள்பாடி, வஞ்சனையையுடைய, சொல்ல, அணிந்த, தந்தை, செயற்பாலது, அவற்றிற்கு, இறைவன், நன்கு, யாவர்க்கும், மாற்ற, திருச்சிற்றம்பலம், ஏழாம், தேவாரப், பதிகங்கள், நீற்றர், ஏற்றர், உழன்று, வாழ்வர், கண்டீர், பட்டு, பொருட்டு, உளதாயின், அதனால், ராயும்