ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.068.திருநள்ளாறு
7.068.திருநள்ளாறு
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
688 |
செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் சம்பு வைத்தழல் அங்கையி னானைச் கும்ப மாகரி யின்னுரி யானைக் நம்ப னைநள் ளாறனை அமுதை |
7.068.1 |
செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும், கரிய கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத சம்புவும், நெருப்பை அகங்கையில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும், குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும், எருதின்மேல் ஏறிவரும் தலைவனும், எங்கள் அருந்துணைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
689 |
விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை பரசு வார்வினைப் பற்றறுப் பானைப் குரைக டல்வரை ஏழுல குடைய நரைவிடை யுடைநள் ளாறனை அமுதை |
7.068.2 |
மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், வேதத்தின் இசையை விரும்புபவனும், அன்பு மிகச்சிறந்து, மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும், பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும், ஒலிக்கின்ற கடலும், மலையும், உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும், ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும், முல்லை நிலத்திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
690 |
பூவில்வா சத்தைப் பொன்னினை மணியைப் சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத் காவியங் கண்ணி பங்கனைக் கங்கைச் நாவில் ஊறுநள் ளாறனை அமுதை |
7.068.3 |
பூவில் உள்ள மணமும், பொன்னும், மணியும் ஆகிய இவைபோல்பவனும், 'மண், நீர், தீ, காற்று, வானம்' என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும், எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும், நன்மையே வடிவானவனும். தேவர்கட்கெல்லாம் தேவனும், தித்திக்கும் தேன்போல இனிப்பவனும், குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும், கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும், 'சீகாமரம்' என்னும் இசையாற் பாடுமிடத்து, நாவில் இனிமை மிகுகின்றவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
691 |
தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை விஞ்சை வானவர் தானவர் கூடிக் நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை |
7.068.4 |
'அடைக்கலம்' என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை, வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும், தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும், அறிவு மிக்க தேவர்களும், அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
692 |
மங்கை பங்கனை மாசிலா மணியை எங்கும் நாடியுங் காண்பரி யானை அங்கம் நான்மறை யான்நிறை கின்ற நங்கள் கோனைநள் ளாறனை அமுதை |
7.068.5 |
மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும், இயல்பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும், வானமாகிய நாட்டை உடையவனும், பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும், எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலைவனும், ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன். வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
693 |
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந் அற்பு தப்பழ ஆவணங் காட்டி நற்ப தத்தைநள் ளாறனை அமுதை |
7.068.6 |
கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும், காமனைக் காய்ந்தவனும் கண்பொருந்திய நெற்றியை உடையவனும், சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து, பொருள்கள், நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும், என்னை அடியவனாக, திருவெண்ணெய் நல்லூரில், யாவரும் வியக்கத் தக்க, பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலையாய் உள்ளவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
694 |
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற அறவ னைஅம ரர்க்கரி யானை குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற நறைவி ரியும்நள் ளாறனை அமுதை |
7.068.7 |
அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும், அன்னதொரு மாயம் வல்லவனும், நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும், தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும், தேவர் சேனைக்குத் தலைவனாகிய, குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவனும், நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும், பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.
695 |
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை வேதனை வேத வேள்வியர் வணங்கும் தூதனைத் தன்னைத் தோழமை யருளித நாத னைநள் ளாறனை அமுதை |
7.068.8 |
மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போல்பவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
696 |
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை |
7.068.9 |
இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க, அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும், அவனது விளங்குகின்ற பெரிய முடியணிந்த தலைகள் ஒருபதையும், தோள்கள் இருபதையும் நெரித்து, பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு, வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் 'இராவணன்' என்ற பெயரையும், அவனுக்கு அளித்த வள்ளலும், குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன், சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளியுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
697 |
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் மறந்து நான்மற்று நினைப்பதே தென்று சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ் கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி |
7.068.10 |
நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை, திருநாவலூரில் தோன்றியவனும், 'சிங்கடி' என்பவளுக்கும் 'வனப்பகை' என்பவளுக்கும் தந்தையும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன், 'இப்பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது' என்று சொல்லி, அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு, இறந்து போதலும், பிறந்து வருதலும் இல்லையாக, பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.068.திருநள்ளாறு , மறந்து, ஆகிய, உடையவனும், னேன்மறந், நாயி, தென்நினைக், வேறு, நினையேன், ஒன்றையும், நினைப்பேன், எதனை, அமுதை, திருநள்ளாற்றில், ளாறனை, எழுந்தருளியிருப்பவனும், கேனே, அடியேன், அமுதம், தலைவனும், போலும், போல்பவனை, நாய்போலும், தனது, உள்ளவனும், வந்த, நிற்பவனும், நாய், திருமுறை, திருநள்ளாறு, பெரிய, எங்கள், கொண்ட, பாடிய, போல்பவனும், தோழமை, சென்ற, காட்டி, கேட்டு, யானை, யேற்கௌ, மங்கை, குற்றங்களைப், விளங்குகின்ற, செய்த, சிங்கடி, வனப்பகை, மகளாகிய, சோலைகள், தன்னை, வெள்ளத்துள், என்பவளுக்கும், குறவர், நான், பெற்ற, பொறுக்கும், சிறந்த, அன்பு, னைநள், லானைக், வெள்ளிய, விரும்புபவனும், பொருள், கரிய, செம்பொன், ஏழாம், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், இல்லாதவனும், உடைய, மங்கைதன், என்னும், ரானை, கூடிக், கடைந்த, நாவில், அமுதம்போல்பவனை, எருதின்மேல், கோனை, வேதத்தின், மனம், அவனது