ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.028.திருக்கடவூர்வீரட்டம்
7.028.திருக்கடவூர்வீரட்டம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்.
தேவியார் - அபிராமியம்மை.
279 |
பொடியார் மேனியனே புரி வடியார் மூவிலைவேல் வள கடியார் கொன்றையனே கட அடிகேள் என்னமுதே எனக் |
7.028.1 |
திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே, புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற்பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை!
280 |
பிறையா ருஞ்சடையாய் பிர மறையார் வானவனே மறை கறையா ரும்மிடற்றாய் கட இறைவா என்னமுதே எனக் |
7.028.2 |
பிறை பொருந்திய சடையை உடையவனே, பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதிற் பிச்சையை ஏற்கின்ற, வேதத்தை ஓதுகின்ற தேவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை?
281 |
அன்றா லின்னிழற்கீழ் அறம் கொன்றாய் காலனுயிர் கொடுத் கன்றா ருங்கரவா கட என்றா தைபெருமான் எனக் |
7.028.3 |
மான் கன்று பொருந்திய கையை உடையவனே, திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே, நீ, அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு அருள்பண்ணி, காலன் உயிரைக் கொன்ற வன்செயலையும் செய்தாய்; அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய்; இன்னதன்மையை உடைய நீயல்லாது வேறு யாவர் எனக்குத் துணை!
282 |
போரா ருங்கரியின் னுரி வாரா ரும்முலையாள் ஒரு காரா ரும்மிடற்றாய் கட தாரா வென்னமுதே எனக் |
7.028.4 |
போர்த் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக்கொண்டும், அம்மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களையுடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே, கருமை பொருந்திய கண்டத்தை உடையாய், திருக்கடவூரினுள் 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை!
283 |
மையார் கண்டத்தினாய் மத மாவுரி போர்த்தவனே பொய்யா தென்னுயிருட் புகுந் தாய் இன்னம் போந்தறியாய் கையார் ஆடரவா கட வூர்தனுள் வீரட்டத்தெம் ஐயா என்னமுதே எனக் கார்துணை நீயலதே. |
7.028.5 |
கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே யானையின் தோலைப் போர்த்தவனே, கையின்கண் பொருந்திநிற்கும் படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே, திருக்கடவூரினுள் 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம்போல்பவனே, நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய்; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந் தறியாய்; ஆதலின், எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை!
284 |
மண்ணீர் தீவெளிகால் வரு பெண்ணோ டாணலியாய் பிற கண்ணா ருண்மணியே கட அண்ணா என்னமுதே |
7.028.6 |
'நிலம், நீர், தீ, காற்று, வானம்' என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும், அப் பூதங்களாலாகிய, 'பெண், ஆண், அலி' என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும் அவற்றில் வேறற நின்று, நீ உருவங்கொள்ளுமிடத்து, யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே, கண்ணின் உள்ளாற் பொருந்தியுள்ள மணிபோல்பவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம்போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை!
285 |
எரியார் புன்சடைமேல் இள நரியா ருஞ்சுடலை நகு கரியா ரீருரியாய் கட அரியாய் என்னமுதே எனக் |
7.028.7 |
தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே, நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள, சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே, யானையினிடத்துப் பொருந்தியிருந்து உரிக்கப்பட்ட தோலை உடையவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, எங்கள் அரிய பொருளானவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யார் துணை!
286 |
வேறா உன்னடியேன் விளங் தேறேன் உன்னையல்லாற் சிவ காறார் வெண்மருப்பா கட ஆறார் செஞ்சடையாய் எனக் |
7.028.8 |
ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே, சிவனே, என்னுடைய செம்மையான விளக்கே, காறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே, திருக்கடவூரின்கண் உள்ள, 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனே, உன் அடியவனாகிய யான், உன்னையல்லது வேறுசிலர் கடவுளர் உளராக நினையேன்; ஆதலின், எனக்கு நீயல்லாது வேறு யார் துணை!
287 |
அயனோ டன்றரியும் மடி பயனே யெம்பரனே பர கயமா ருஞ்சடையாய் கட அயனே என்னமுதே எனக் |
7.028.9 |
முன்னொரு ஞான்று, பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடிப்போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே, எங்கள் கடவுளே, மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே, மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே, திருக்கடவூரின்கண் உள்ள, 'திருவீரட்டானம், என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பிறப்பில்லாதவனே' என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யார் துணை!
288 |
காரா ரும்பொழில்சூழ் கட ஏரா ரும்மிறையைத் துணை ஆரூ ரன்னடியான் அடித் பாரோர் ஏத்தவல்லார் பர |
7.028.10 |
மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள, 'திருவீரட்டானம்' என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து, அழகிய திருநாவலூரில் தோன்றியவனும், திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின், சிவலோகத்தில் இருத்தல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.028.திருக்கடவூர்வீரட்டம் , பொருந்திய, துணை, என்னும், உடையவனே, எனக், கார்துணை, நீயலதே, கோயிலில், எழுந்தருளியிருக்கின்ற, என்னுடைய, எனக்கு, வேறு, நீயல்லாது, என்னமுதே, எங்கள், திருக்கடவூரினுள், வீரட்டத்தெம், யாவர், போல்பவனே, அமுதம், வீரட்டானம், வூர்தனுள், உள்ள, வூர்த்திரு, வீரட்டத்துள், யார், சடையை, நீர், உள்ளவனே, திருக்கடவூர்வீரட்டம், தலைவனே, திருமுறை, திருக்கடவூரின்கண், தேவாரப், போர்த்தவனே, அமுதம்போல்பவனே, பாம்பை, பொருந்தியுள்ள, மேலான, திருவீரட்டானம், ஏழாம், கொண்டவனே, கருமை, ஆதலின், பதிகங்கள், வானவனே, ரும்மிடற்றாய், ருஞ்சடையாய், அணிந்தவனே, வீரட்டம், கையில், பொருளாய், காரா, யானையின், திருச்சிற்றம்பலம், உடைய, கண்டத்தை, தோலைப்