ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.024.திருமழபாடி
7.024.திருமழபாடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர்.
தேவியார் - அழகம்மை.
239 |
பொன்னார் மேனியனே புலித் மின்னார் செஞ்சடைமேல் மிளிர் மன்னே மாமணியே மழ அன்னே உன்னையல்லால் இனி |
7.024.1 |
பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னை யன்றி யான் வேறு யாரை நினைப்பேன்?
240 |
கீளார் கோவணமுந் திரு தாளே வந்தடைந்தேன் தலை வாளார் கண்ணிபங்கா மழ கேளா நின்னையல்லால் இனி |
7.024.2 |
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள்.
241 |
எம்மான் எம்மனையென் றனக் இம்மா யப்பிறவி பிறந் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ அம்மான் நின்னையல்லால் இனி |
7.024.3 |
மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே, 'என் தந்தை என் தாய்' என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார்; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன்; ஆதலின், இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன்?
242 |
பண்டே நின்னடியேன் அடி தொண்டே பூண்டொழிந்தேன் தொட வண்டார் பூம்பொழில்சூழ் மழ அண்டா நின்னையல்லால் இனி |
7.024.4 |
வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே, வானுலகில் வாழ்பவனே, உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார், அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டு விட்டேன்; உன்னோடாயினும், உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன்; ஆதலின் இனி, யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன்?
243 |
பண்ணார் இன்றமிழாய்ப் பர மண்ணார் பூம்பொழில்சூழ் மழ அண்ணா நின்னையல்லால் இனி |
7.024.5 |
ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும், அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும், பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும், எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே, நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, தலைவனே, இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன்?
244 |
ஆளா வந்தடைந்தேன் அடி மாளா நாளருளும் மழ ஆளாய் நின்னையல்லால் இனி |
7.024.6 |
அடியவர்கட்கு, முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, உனக்கு நான் ஆளாயினபின், உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.
245 |
சந்தா ருங்குழையாய் சடை வெந்தார் வெண்பொடியாய் விடை மைந்தார் சோலைகள்சூழ் மழ எந்தாய் நின்னையல்லால் இனி |
7.024.7 |
பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே, சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே, வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே, இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே, என் தந்தையே, நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்?
246 | வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் செய்ய மலர்களிட மிகு மையார் பூம்பொழில்சூல் மழ ஐயா நின்னையல்லால் இனி |
7.024.8 |
வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம், நல்ல மலர்களை இட்டு வழிபட, அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே, இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, என் தலைவனே, அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்?
247 |
நெறியே நின்மலனே நெடு குறியே நீர்மையனே கொடி மறிசேர் அங்கையனே மழ அறிவே நின்னையல்லால் இனி |
7.024.9 |
உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே, மலத்தாற் பற்றப்படாதவனே, நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே, நற்பண்புடையவனே, கொடிபோலும் இடையினையுடைய உமாதேவிக்குக் கணவனே, மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, அறிவு வடிவானவனே, அடியேன், இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்?
248 |
ஏரார் முப்புரமும் மெரி வாரார் கொங்கையுடன் மழ சீரார் நாவலர்கோன் ஆ பாரோர் ஏத்தவல்லார் பர |
7.024.10 |
அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந் தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.024.திருமழபாடி , யாரை, பாடியுள், நினைக்கேனே, மாணிக்கமே, வேறு, நினைப்பேன், போல்பவனே, நின்னையல்லால், திகழும், மாணிக்கம், உன்னை, திருமழபாடியுள், சூழ்ந்த, தலைவனே, இப்பொழுது, நிறைந்த, பொருந்திய, திருமழபாடியில், உனக்கு, யான், அணிந்தவனே, வந்து, பூம்பொழில்சூழ், எனக்கு, அடியேன், திருமுறை, திருமழபாடி, யல்லாது, நான், நல்ல, தேவர், மாணிக்கம்போல்பவனே, அழகு, பூஞ்சோலைகள், மிகு, உள்ள, திகழ்கின்ற, சோலைகள், ஆகிய, ஏன்றுகொள்நீ, கொன்றை, உடையவனே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஏழாம், தேவாரப், உடுத்து, யன்றி, அழகிய, துணையாக, உன்னையல்லாது, உடைய, வந்தடைந்தேன், ஆதலின்