முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.079.திருக்கழுமலம்
1.079.திருக்கழுமலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
853 |
அயிலுறுபடையினர் விடையினர்முடிமே மயிலுறுசாயல் வனமுலையொருபான் பயில்வுறுசரிதைய ரெருதுகந்தேறிப் கயிலையும்பொதியிலு மிடமெனவுடையார் |
1.079.1 |
கூர்மை பொருந்திய சூலப் படையை உடையவரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரிய மிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராண வரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம்வினைத் தீமை அறும்.
854 |
கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் |
1.079.2 |
மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகிய மிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரை மேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.
855 |
எண்ணிடையொன்றின ரிரண்டினருருவ மண்ணிடையைந்தின ராறினரங்கம் பண்ணிடையொன்பது முணர்ந்தவர்பத்தர் கண்ணிடைக்கனலினர் கருதியகோயில் |
1.079.3 |
எண்ணத்தில் ஒன்றாயிருப்பவர், சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர். நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். எண்வகைக் கலைகளில் ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும்.
856 |
எரியொருகரத்தின
ரிமையவர்க்கிறைவ திரிதருமியல்பின ரயலவர்புரங்க வரிதருகண்ணிணை மடவரலஞ்ச கரியுரிமருவிய வடிகளுக்கிடமாங் |
1.079.4 |
ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித் திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும், வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை நீங்கும்.
857 |
ஊரெதிர்ந்திடுபலி தலைகலனாக பாரெதிர்ந்தடிதொழ விரைதருமார்பிற் நீரெதிர்ந்திழிமணி நித்திலமுத்த காரெதிர்ந்தோதம்வன் றிரைகரைக்கெற்றுங் |
1.079.5 |
ஊர்மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர். வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர். மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர் தமக்கு இடமாய் உள்ளதால், மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்துவரும் மணிகள், முத்துக்கள், ஒழுங்குற நிறைந்த வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும்.
858 |
முன்னுயிர்த்தோற்றமு
மிறுதியுமாகி பின்னியசடைமிசைப் பிறைநிறைவித்த பொன்னியனறுமலர் புனலொடுதூபஞ் கன்னியர்நாடொறும் வேடமேபரவுங் |
1.079.6 |
உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராய், முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற, வட்டமாக, முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங் கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும், பொன் போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங்களைப் போற்றி வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும்.
859 |
கொலைக்கணித்தாவரு
கூற்றுதைசெய்தார் நிலைக்கணித்தாவர நினையவல்லார்தந் மலைக்கணித்தாவர வன்றிரைமுரல கலைக்கணங்கானலி னீழலில்வாழுங் |
1.079.7 |
மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும், தோணிமலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும், தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்.
860 |
புயம்பலவுடையதென் னிலங்கையர்வேந்தன் பயம்பலபடவடர்த் தருளியபெருமான் வியன்பலவிண்ணினு மண்ணினுமெங்கும் கயம்பலபடக்கடற் றிரைகரைக்கெற்றுங் |
1.079.8 |
தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன் முடிகளையும், வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்குவதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.
861 |
விலங்கலொன்றேந்திவன் மழைதடுத்தோனும் பலங்களானேடியு மறிவரிதாய மலங்கிவன்றிரைவரை யெனப்பரந்தெங்கு கலங்கடன்சரக்கொடு நிரக்கவந்தேறுங் |
1.079.9 |
கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும், மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான், விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில், வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும்.
862 |
ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு நோம்பலதவமறி யாதவர்நொடிந்த சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத் காம்பனதோளியொ டினிதுறைகோயில் |
1.079.10 |
இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும்.
863 |
கலிகெழுபாரிடை யூரெனவுளதாங் வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர் ஒலிகெழுமாலையென் றுரைசெய்தபத்து மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும் |
1.079.11 |
ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம் உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத் தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.079.திருக்கழுமலம் , வினைகரிசறுமே, நினைய, கழுமலநினையநம், நீங்கும், கழுமலத்தை, உடைய, உடையவரும், அலைகள், உறையும், விரும்பி, கோயிலை, தீமை, வந்து, பொருந்திய, ஆகியன, விளங்கும், வினைகளின், வலிய, ஏற்று, மேல், கரையில், திருமுறை, தீமைகள், கடல், கொண்டு, திருக்கழுமலம், அழகிய, மேகம், ஆகிய, நிறைந்த, மணம், றிரைகரைக்கெற்றுங், இடும், உலகில், வினைத், தரும், போற்ற, விளங்குவதும், வரும், வேறுவேறு, இடமாக, பொன், கோயில், கூறும், வெள்ளிய, உடையதும், பலவற்றை, வணங்க, தேவாரப், மலர், சங்குகள், கொணர்ந்து, சிவபெருமான், கயிலை, பதிகங்கள், போலும், கரிய, வீசும், கழுமல, தலைவர், மூங்கில், தோள்களையும், வந்த, பெருமான், அத்தகைய, திருவடிகளை, திருச்சிற்றம்பலம், தோன்றிய, அணிந்தவர்