முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.071.திருநறையூர்ச்சித்தீச்சரம்
1.071.திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
765 |
பிறைகொள்சடையர் புலியினுரியர் கறைகொள்கண்டர் கபாலமேந்துங் மறைகொள்கீதம் பாடச்சேடர் சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் |
1.071.1 |
பெருமை உடைய மறையவர் தங்கள் இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப் பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர் புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடைய பாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.
766 |
பொங்கார்சடையர் புனலரனலர் தங்காதலியுந் தாமுமுடனாய்த் கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் செங்காலனமும் பெடையுஞ்சேருஞ் |
1.071.2 |
தழைத்த சடையினராய், கங்கை அணிந்தவராய், அனல் ஏந்தியவராய், பூதகணங்கள் பாடத் தம் காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய், ஒப்பற்றதொரு விடைமீது, தேன்பொருந்திய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடிக் கொண்டு குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த கால்களை உடைய ஆண் அன்னமும் பெண் அன்னமும் கூடிக் களிக்கும் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.
767 |
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் பொடிகொணூலர் புலியினதளர் கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கொடிகொண்மாடக் குழாமார்நறையூர்ச் |
1.071.3 |
முடியாகச் சடையினை உடையவராய், ஒரு கலையோடு தோன்றும் வெண்மையான மதியை அணிந்தவராய், மூப்படையாத தம் திருமேனியின்மேல் திருநீற்றையும் முப்புரி நூலையும் அணிந்தவராய், புலித்தோலை உடுத்தவராய், முறுக்கப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர்நிலைகளில் கயல் மீன்களின் இனங்கள் பாய்ந்து விளையாடக் கொடிகள் கட்டிய மாடவீடுகளின் கூட்டங்கள் நிறைந்த நறையூரில் உள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.
768 |
பின்றாழ்சடைமே னகுவெண்டலையர் மின்றாழுருவிற் சங்கார்குழைதான் பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் |
1.071.4 |
பூசைக்குகந்த பொன் போன்ற கொன்றை, செருந்தி, புன்னை, ஏற்புடையதான செண்பகம் ஆகியன வானுறப் பொருந்தி வளரும் செல்வச் செழுமையுடைய அழகிய நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமேல், விளங்கும் வெண்மையான தலை மாலையை அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி மின்னலைத் தாழச் செய்யும் ஒளி உருவினர். சங்கக் குழையணிந்த காதினை உடையவர்.
769 |
நீரார்முடியர் கறைகொள்கண்டர் பாரார்புகழாற் பத்தர்சித்தர் தேரார்வீதி முழவார்விழவி சீரார்கோலம் பொலியுநறையூர்ச் |
1.071.5 |
உலகில் பரவிய தமது புகழ் மொழிகளைப் பக்தர்களும் சித்தர்களும் பாடி ஆடத் தேரொடும் வீதிகளில் முழவின் ஒலி, விழா ஒலியோடு பெருகி எண் திசையும் பரவ, புகழ் பொருந்திய அழகோடு விளங்கும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் உறையும் இறைவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கறை பொருந்திய கண்டத்தை உடையவர். வேதங்கள் நிறைந்த நாவினர்.
770 |
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் தீண்டுமாட மெழிலார்சோலை தீண்டுமதியந் திகழுநறையூர்ச் |
1.071.6 |
ஒன்றோடு ஒன்று வந்து பொருந்தும் மாட வீடுகளையும், அழகிய சோலைகளையும், மதியைத் தீண்டும் உயரமாக விளங்கிய கோபுரங்களையும் உடைய நறையூரில் உள்ள சித்தீச்சரத்து இறைவர், நரண்ட சடைமுடியை உடையவர். பூச்சரங்களைக் கொண்ட கொன்றையினது மலரால் தொடுத்த மாலையை அணிந்தவர். ஒளி மிகுந்து தோன்றும் பொன்போன்ற ஒளி உருவம் உடையவர். பவளம் போன்ற அழகிய செந்நிறத்தை உடையவர்.
771 |
குழலார்சடையர் கொக்கினிறகர் தழலார்மேனித் தவளநீற்றர் எழிலார்நாகம் புலியினுடைமே கழலார்சிலம்பு புலம்பவருவார் |
1.071.7 |
அழகு பொருந்திய பாம்பினைப் புலித்தோல் ஆடை மேல் பொருந்தக் கட்டிக் கொண்டு விடைமீது ஏறி, கழலும் சிலம்பும் கால்களில் ஒலிக்க வருபவராகிய நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவர், மாதொரு பாகராதலின் கூந்தலும் சடையும் அமைந்த திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர். அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலர் சூடித் தழல் போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிந்தவர்.
772 |
கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன் வரையார்தோளா லெடுக்கமுடிகள் உரையார்கீதம் பாடநல்ல திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் |
1.071.8 |
அலைகளோடு கூடிய நீர் நிலைகளால் சூழப்பட்ட செல்வ வளம் மிக்க நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்துறையும் இறைவர், கரைகளை வந்து பொருந்தும் கடல் நாற்புறமும் சூழ்ந்துள்ள இலங்கை மன்னன் இராவணன், கயிலை மலையை, மலை போன்ற தன்தோளால் பெயர்க்க முற்பட்டபோது, தலைகளைக் கால் விரலால் நெரிக்க, அவன்தன் பிழை உணர்ந்து நல் உரைகளால் இயன்ற பாடல்களைப் பாடிப் போற்ற, அளவிடமுடியாத நல்லருளை வழங்கியவர்.
773 |
நெடியான்பிரம னேடிக்காணார் அடியாரவரு மருமாமறையு முடியால்வணங்கிக் குணங்களேத்தி செடியார்செந்நெற் றிகழுநறையூர்ச் |
1.071.9 |
திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாதவராய் விளங்கிய சிவபெருமான் தம்மை நினைப்பவரின் மனத்தில் விளங்கித் தோன்றுபவராய், அடியவர்களும், அரிய புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும், தம் முடியால் வணங்கிக் குணங்களைப் போற்றி முதல்வா அருள் என்று வழிபடுமாறு செந்நெற் பயிர்கள் புதர்களாய்ச் செழித்துத் திகழும் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.
774 |
நின்றுண்சமண ரிருந்துண்டேரர் ஒன்றுமுணரா வூமர்வாயி கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச் |
1.071.10 |
நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச் சிறப்பொன்றையும் அறியாத ஊமர்கள். அவர்கள் தம் வாயால் கூறும் உரைகளைக் கேட்டு உழல் பவரே! எளிதில் அருள் நல்கும் சிவபிரான், கன்று விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக் கண்டு பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்துவிட அக் கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை அடையும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார். சென்று தொழுமின்.
775 |
குயிலார்கோல மாதவிகள் செயிலார் பொய்கை சேருநறையூர்ச் மயிலார்சோலை சூழ்ந்தகாழி பயில்வார்க்கினிய பாடல்வல்லார் |
1.071.11 |
குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.071.திருநறையூர்ச்சித்தீச்சரம் , சரத்தாரே, சித்தீச், உடையவர், இறைவர், அணிந்தவர், அழகிய, சித்தீச்சரத்து, விளங்கும், சித்தீச்சரத்தில், நறையூரில், நறையூர்ச், பொருந்திய, உடைய, மலர், திருமுறை, எழுந்தருளியுள்ளார், திருநறையூர்ச்சித்தீச்சரம், நிறைந்த, அணிந்தவராய், வாழும், சென்று, பால், மாலையை, அமைந்த, செண்பகம், முதல்வா, உள்ள, பாடி, விளங்கிய, சேருநறையூர்ச், வந்து, கயிலை, அருள், சூழ்ந்த, புகழ், பொருந்தும், கொண்டு, பாடல்களைப், கொண்ட, புலித்தோலை, சித்தரச், கறைகொள்கண்டர், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், பிரமனது, விடையேறிக், அன்னமும், தோன்றும், வெண்மையான, சிவந்த, குளிர்ந்த, சூடிக், விடைமீது, கொன்றை, தாழ்ந்து