முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.065.காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
1.065.காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பல்லவனேசர்.
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
701 |
அடையார்தம் புரங்கண்மூன்று விடையார்மேனி யராய்ச்சீறும் கடையார்மாட நீடியெங்கும் படையார்புரிசைப் பட்டினஞ்சேர் |
1.065.1 |
பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வானவெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.
702 |
எண்ணாரெயில்கண் மூன்றுஞ்சீறு கண்ணாயுலகங் காக்கநின்ற மண்ணார்சோலைக் கோலவண்டு பண்ணார்செய்யும் பட்டினத்துப் |
1.065.2 |
பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரிபுரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசை பாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.
703 |
மங்கையங்கோர் பாகமாக கங்கையங்கே வாழவைத்த பொங்கயஞ்சேர் புணரியோத பங்கயஞ்சேர் பட்டினத்துப் |
1.065.3 |
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனரச்சரமாகும்.
704 |
தாரார்கொன்றை பொன்றயங்கச் நீரார்நீறு சாந்தம்வைத்த போரார்வேற்கண் மாதர்மைந்தர் பாரார்கின்ற பட்டினத்துப் |
1.065.4 |
மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.
705 |
மைசேர்கண்ட ரண்டவாணர் மெய்சேர்பொடிய ரடியாரேத்த கைசேர்வளையார் விழைவினோடு பைசேரரவா ரல்குலார்சேர் |
1.065.5 |
கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடையவரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறு பூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.
706 |
குழலினோசை வீணைமொந்தை கழலினோசை யார்க்கவாடுங் சுழியிலாருங் கடலிலோதந் பழியிலார்கள் பயில்புகாரிற் |
1.065.6 |
குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தௌந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.
707 |
வெந்தலாய வேந்தன்வேள்வி வந்தெலாமுன் பேணநின்ற மந்தலாய மல்லிகையும் பந்தலாரும் பட்டினத்துப் |
1.065.7 |
தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குராமரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.
708 |
தேரரக்கன் மால்வரையைத் றாரரக்குந் திண்முடிக காரரக்குங் கடல்கிளர்ந்த பாரரக்கம் பயில்புகாரிற் |
1.065.8 |
சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனரச்சரமாகும்.
709 |
அங்கமாறும் வேதநான்கு தங்கணாலு நேடநின்ற வங்கமாரு முத்தமிப்பி பங்கமில்லார் பயில்புகாரிற் |
1.065.9 |
ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.
710 |
உண்டுடுக்கை யின்றியேநின் கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் தண்டுடுக்கை தாளந்தக்கை பண்டிடுக்கண் டீரநல்கும் |
1.065.10 |
அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.
711 |
பத்தரேத்தும் பட்டினத்துப் அத்தன்றன்னை யணிகொள்காழி சித்தஞ்சேரச் செப்புமாந்தர் ஒத்தமைந்த வும்பர்வானி |
1.065.11 |
பக்தர்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.065.காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் , பல்லவ, னீச்சரமே, இடம், பட்டினத்துப், சிவபிரான், பல்லவனீச்சரமாகும், எழுந்தருளிய, காவிரிப்பூம்பட்டினத்துப், உடைய, பொருந்திய, திருமுறை, ஆகிய, காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம், மக்கள், பயில்புகாரிற், மிக்க, கடல், சங்கரன், நின்ற, புகார், பல்லவனரச்சரமாகும், அடியவர், வந்து, கண்டு, அழகிய, பகைவராய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், அசுரர்களின், மேவிய, திருப்பல்லவனீச்சரமாகும், விளங்குவதும், உயர்ந்து, மலர்கள்