முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.049.திருநள்ளாறு
1.049.திருநள்ளாறு
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
526 |
போகமார்த்த பூண்முலையாள் பாகமார்த்த பைங்கண்வெள் ஆகமார்த்த தோலுடையன் நாகமார்த்த நம்பெருமான் |
1.049.1 |
இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப் பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.
527 |
தோடுடைய காதுடையன் பீடுடைய போர்விடையன் ஏடுடைய மேலுலகோ நாடுடைய நம்பெருமான் |
1.049.2 |
அம்மை பாகத்தே உள்ள இடச் செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப்புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய, எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.
528 |
ஆன்முறையா லாற்றவெண்ணீ பான்முறையால் வைத்தபாதம் மான்மறியும் வெண்மழுவுஞ் நான்மறையான் நம்பெருமான் |
1.049.3 |
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திரு வெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
529 |
புல்கவல்ல வார்சடைமேற் மல்கவல்ல கொன்றைமாலை பல்கவல்ல தொண்டர்தம்பொற் நல்கவல்ல நம்பெருமான் |
1.049.4 |
பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும் பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
530 |
ஏறுதாங்கி யூர்திபேணி ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் நீறுதாங்கி நூல்கிடந்த நாறுதாங்கு நம்பெருமான் |
1.049.5 |
ஆன்ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
531 |
திங்களுச்சி மேல்விளங்குந் எங்களுச்சி யெம்மிறைவன் தங்களுச்சி யால்வணங்குந் நங்களுச்சி நம்பெருமான் |
1.049.6 |
திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய், தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம் பெருமானே! என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
532 |
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி அஞ்சிடத்தோ ராடல்பாடல் செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் நஞ்சடைத்த நம்பெருமான் |
1.049.7 |
கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
533 |
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ பட்டமார்ந்த சென்னிமேலோர் நட்டமாடும் நம்பெருமான் |
1.049.8 |
பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டியசென்னியின் மேல் பால் போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம்பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
534 |
உண்ணலாகா நஞ்சுகண்டத் அண்ணலாகா வண்ணல்நீழல் எண்ணலாகா வுள்வினையென் நண்ணலாகா நம்பெருமான் |
1.049.9 |
யாராலும் உண்ணமுடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
535 |
மாசுமெய்யர் மண்டைத் தேரர் பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி மூசுவண்டார் கொன்றைசூடி நாசஞ்செய்த நம்பெருமான் |
1.049.10 |
அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீரர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம் பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.
536 |
தண்புனலும் வெண்பிறையுந் நண்புநல்லார் மல்குகாழி பண்புநள்ளா றேத்துபாடல் உண்புநரங்கி வானவரோ |
1.049.11 |
நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.049.திருநள்ளாறு , திருநள்ளாறு, நம்பெருமான், நள்ளாறே, மேயது, தலம், ஆகும், பெருமான், மேவிய, மேல், பொருந்திய, விளங்கும், கொன்றை, திருமுறை, என்னும், சூடி, வாழும், உள்ள, உடைய, அழகிய, வெண்மையான, தேவாரப், கையில், சிவபிரான், கண்டத்தில், தாங்கிய, நஞ்சினை, எங்கள், யாராலும், சென்னிமேலோர், திருமேனியின், பாகமாக, கொண்டவனும், கோவண, திருச்சிற்றம்பலம், ஆடும், தனது, பதிகங்கள்